இந்தியாவில் வீட்டினை சுத்தம் செய்வது, ஏசி சர்வீஸ், வீட்டை தேடி வரும் சலூன் என பல புரட்சிகளை கொண்டு வந்தது தான் அர்பன் கம்பெனி நிறுவனம். ஒரு கிளிக் செய்தாலே நம் வீட்டை தேடி நிபுணர்கள் வந்து ஏசி, வாஷிங் மெசின் சர்வீஸ், வீட்டினை சுத்தம் செய்து தருவது, சலூன் சேவைகள் என அனைத்தையும் வழங்குவார்கள்.
அர்பன் கம்பெனி (Urban Company ) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனம் . இதன் ஒரு பகுதியாக நிறுவன விரிவாக்கத்துக்காக ஐபிஓ வெளியீடு செய்ய இருக்கிறது. செப்டம்பர் 10, புதன்கிழமை அன்று முதல் அர்பன கம்பெனி ஐபிஓவில் விண்ணப்பம் செய்யலாம்.

அர்பன் கம்பெனி ஐபிஓ-வின் ஒரு பங்கின் விலை 98 முதல் 103 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் 1,900 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மெயின்போர்டு ஐபிஓ செப்டம்பர் 12, வெள்ளிக்கிழமை அன்று முடிவடையும்.
அர்பன் கம்பெனி ஐபிஓ, ரூ.472 கோடிக்கு புதிய பங்கு வெளியீட்டையும், ரூ.1,428 கோடி ஆஃபர் ஃபார் சேல் முறையில் பங்கு விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் 145 பங்குகளாகவும், அதன் மடங்குகளாகவும் விண்ணப்பிக்கலாம்.
சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு ஐபிஓ தொகுப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ரூ.14,935 செலுத்த வேண்டும். இந்த ஐபிஓ-வில் 75% தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும் (QIBs), 15% நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்கும் (NIIs), மீதமுள்ள 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தகுதியுள்ள ஊழியர்களுக்காக ரூ.2.5 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு விற்பனையில் இருந்து திரட்டப்படும் நிதியில், ரூ .190 கோடியை புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும், கிளவுட் கட்டமைப்பிற்கும், ரூ.75 கோடியை அலுவலக குத்தகை கொடுப்பனவுகளுக்கும், ரூ.90 கோடியை சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும், மீதமுள்ளவற்றை பொது நிறுவன நோக்கங்களுக்கும் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அர்பன் கம்பெனி இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 51 நகரங்களில் செயல்படுகிறது. Investorgain.com இன் சமீபத்திய தரவுகளின்படி, அர்பன் கம்பெனி ஐ.பி.ஓ ஜி.எம்.பி (கிரே மார்க்கெட் பிரீமியம்) ரூ.10 ஆக இருந்தது.
இதன் பொருள், நிறுவனத்தின் பங்குகள் கிரே சந்தையில் அதன் வெளியீட்டு விலையை விட ரூ.10 அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. எனவே இது பிரீமியம் விலையில் தான் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பும் பிளிப்கார்ட்! இந்தியாவில் IPO களமிறங்க மெகா திட்டம்!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications