சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேடுவில் இன்று காய் கரிகளின் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
செவாய்க்கிழமைமை வாஇ 40 ரூபாயாக இருந்த கிலோ கேரட்டின் விலை அதிரடியாக 30 ரூபாய் உயர்ந்து 70 ரூபாய் கிலோ என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கேரட் போன்றே பீன்சின் விலையும் கிலோவிஏகு 20 ரூபாய் உயர்ந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெண்டக்காய் விலை கிலோவின் மீது 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதே நேரம் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற சின்ன வெங்காயத்தின் வரவு அதிகரித்து இருப்பதினால் 150 ரூபாயாக இருந்து கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 110 ரூபாயாகக் குறைந்துள்ளது.
ஒரு வாரமாகக் கிலோ தக்காளி கிலோ 60 ரூபாய் என விற்கப்பட்டு வந்துள்ள நிலையில் இன்று 50 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆனால் பெங்களூருவில் 50 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை கிலோ 10 ரூபாய் உயர்ந்து 60 ரூபாயாக உள்ளது.
வாழைப்பழம் விலையும் அதிக விளைச்சலின் காரணத்தினால் பச்சை வாழைப்பழத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 சதவீதம் வரை குறைந்து 40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பிற ரகங்களும் 100 ரூபாய்க்குள் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.