விஷால் ஷிக்காவின் வெளியேற்றத்தால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதம் வரை சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது, மேலும் 30,000 கோடி ரூபாயினைத் தனது சந்தை மதிப்பில் இழந்துள்ளது.
மும்பை பங்கு சந்தையும் 400 புள்ளிகள் வரை சரிந்து பின்னர்ச் சற்று முன்னேறி 270.78 புள்ளிகள் சரிவுடன் சந்தையினை முடித்துக்கொண்டது.
இன்றைய பங்கு சந்தையில் இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை இன்று காலை 1,021.50 ரூபாயாக இருந்தது. விஷால் சிக்காவின் அறிவிப்பால் அது இன்று சந்தை நேர முடிவில் 9.56 சதவீதமாக அதாவது 97.65 புள்ளிகள் சரிந்து 923.50 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
விஷால் சிக்கா சாடல்
தனிப்பட்ட மற்றும் எதிர்மறையாகத் தாக்குதல்கள் பெருகிய முறையில் மாறி வருவதாகவும் இதனால் நிறுவனத்தின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான நிர்வாகத்தின் திறனை தடுக்கின்றன என்றும் கவனச்சிதறல்கள் ஏற்படுத்துகின்றன என விஷால் சிக்கா தனது இராஜிநாமா கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
52 வார சரிவு
இந்த வார பங்க்குச் சந்தை இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை வெளியான இந்த அறிவிப்பினை அடுத்து 52 வார சரிவை இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் சந்தித்துள்ளன.13 சதவீதத்திற்கு அதிகமாகப் பங்குகளின் விலை சரிந்து 884.40 புள்ளிகளாக மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் ஆனது.
சவால்
விஷால் சிக்கா அவர்கள் நிறுவனத்தினை விட்டு வெளியேறியதை அடுத்து ஐடி உலகில் மிகப் பெரிய சவாலினை பிரவின் ராவ் சந்திக்க இருக்கின்றார் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மீண்டு எழும்
இந்திய ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய முடிவு என்றாலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் இதில் இருந்து மீண்டு எழும் என்று கூறியுள்ளனர்.