சென்செக்ஸ் நேற்று திடீரென இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. அது போக, அடுத்த அடுத்த நாட்களிலும் சென்செக்ஸ் இறக்கத்தில் வர்த்தகமாக வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.
ஆனால் இன்று எல்லா கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி, ஏற்றத்தில் கம்பீரமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இன்று காலை வர்த்தக நேரத்திலேயே சென்செக்ஸ் 794 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் நிலவரம்
தற்போது சுமாராக 500 புள்ளிகள் ஏற்றத்தில் 33,728 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 24 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 6 கம்பெனிகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 1 %-க்கு மேல், 2 பங்குகள் மட்டுமே விலை சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சரி இன்றைய சென்செக்ஸ் ஏற்றத்துக்கு என்ன காரணம்..? 3 காரணங்களைச் சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
1. அமெரிக்க ஃபெடரல் வங்கி
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், பங்குச் சந்தைகளில் கார்ப்பரேட் பாண்டுகளை வாங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்து இருக்கிறது. எனவே பங்குச் சந்தையைவிட்டு போன முதலீட்டாளர்கள் கூட மீண்டும், முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த பாசிட்டிவ் செண்டிமெண்டால், சென்செக்ஸும் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
2. சீனாவில் நோய் தொற்று
ஒட்டு மொத்தமாக உலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேரைத் தாண்டிவிட்டது. இருப்பினும், சீனாவில் புதிதாக மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 36 ஆக இருந்தது. இன்று 27 ஆக குறைந்து இருக்கிறது. இது இந்தியா போன்ற ஆசிய சந்தைகளில் ஒரு பாசிட்டிவ் செய்தியாக பார்க்கப்படுகிறதாம். இதுவும் இந்திய சந்தைகள் ஏற்றம் காண ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
3. உலக சந்தைகள்
அண்ணன் தம்பிகள், பங்காளிகள் எல்லாம் நன்றாக இருந்தால் ஒட்டு மொத்த குடும்பமும் நன்றாகத் தானே இருக்கும். அது போல, ஆசிய சந்தைகள் தொடங்கி அமெரிக்க சந்தைகள் வரை, எல்லா சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாவதால், இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications