பொதுவாக பங்குச்சந்தை முதலீடுகள் என வரும் போது எந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் ? எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்கு கண்ணை மூடிக் கொண்டு பெரு நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர் என்கிறார் பங்குச்சந்தை நிபுணரும், சாய் ஷேர்டியூட் நிறுவனத்தின் தலைவருமான தர்மஸ்ரீ ராஜேஸ்வரன்.
மீண்டெழுந்த டாடா மோட்டார்ஸ்: ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலின் "ஸ்டாக் பேச்சு" நிகழ்ச்சிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள அவர், பெரு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் போது அவை வீழ்ந்தாலும் மீண்டெழுந்து எதிர்பார்க்காத லாபத்தை தரும் என விளக்கம் தந்துள்ளார்.

இதற்கு உதாரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டாடா குழுமத்தின் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. டாடா மோட்டார்ஸை பொறுத்தவரை நீண்ட நாள் முதலீடு மற்றும் டே டிரேடிங் என இரண்டுக்குமே பொறுத்தமானது என பங்குச்சந்தை நிபுணர் தர்மஸ்ரீ ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஏன் பெரு நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்?: டாடா மோட்டார்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பங்கு விலை நன்றாக உயர்ந்தது, ஆனால் நேனோ காருக்கு வரவேற்பு கிடைக்காதது, லேண்ட் ரோவர் கார் பிரச்னை ஆகிய காரணங்களால் பங்கு பெருமளவில் குறைந்தது.
குறிப்பாக கொரோனா காலத்தில்700 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை என டாடா மோட்டார்ஸின் விலை சரிந்தது. தற்போது 1,000 ரூபாய்க்கும் மேல் ஒரு பங்கின் விலை அதிகரித்துள்ளது.

டாடா மோட்டார்ஸை பொறுத்தவரை டாடா குழும நிறுவனங்களிலேயே அதிக சறுக்கலை கண்ட அதை விட வேகமாக மீண்டெழுந்த ஒரு நிறுவனம் ஆகும். இதற்கு காரணம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தியது தான்.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு அரசு வழங்கும் மானியம் மற்றும் பெட்ரோல் செலவு குறைவு போன்ற காரணங்களை கூறலாம். ஆனால் இது தான் டாடா மோட்டார்ஸின் வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவியுள்ளது.
டாடா மோட்டார்ஸை பொறுத்தவரை சந்தை மூலதனம் என்பது 3.61 லட்சம் கோடியாக உள்ளது. இதன் ஆண்டு வருவாய் 3.50 லட்சம் கோடி, லாபம் என பார்த்தால் ஆண்டுக்கு 2,353 கோடி, நிறுவனத்தின் நிகர மதிப்பு 52,600 கோடி ரூபாய். நிறுவன புரமோட்டர்கள் வசம் 46.37% பங்குகளும், வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் 18.62% பங்குகளும் உள்ளன.
சில்லரை முதலீட்டாளர்கள் வசம் 18.62% பங்குகள் உள்ளன. நடப்பாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1100 ரூபாய் வரை உயரும் என பங்குச்சந்தை நிபுணர் தர்மஸ்ரீ ராஜேஸ்வரன்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications