இன்று காலை நிஃப்டி 10 சதவிகித சரிவைக் கண்ட உடன், இந்திய சந்தைகள் இரண்டுமே 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இது கடந்த 12 ஆண்டுகளில் நடக்காத ஒரு சம்பவம் என்பது நினைவு கூறத்தக்கது.
இப்படி சந்தையை நிறுத்த சர்க்யூட் பிரேக்கர் என்கிற வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். அப்படி என்றால் என்ன..? வாருங்கள் பார்ப்போம்.
சர்க்யூட் பிரேக்கர்
ஒரே நாளில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பங்கு அல்லது இண்டெக்ஸ் உயர்ந்தாலோ அல்லது சரிந்தாலோ, அந்த பங்கின் வர்த்தகம் அல்லது ஒட்டு மொத்த இண்டெக்ஸின் வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தப்படும் இதைத் தான் சர்க்யூட் பிரேக்கர் என்கிறோம்.
எத்தனை வகை பிரேக்கர்
இந்திய சந்தைகளில் மொத்தம் 3 வகை சர்க்யூட் பிரேக்கர்கள் இருக்கின்றன.
10 %
15 %
20 %
இந்தியாவில் நிஃப்டி அல்லது சென்செக்ஸ் என எந்த இண்டெக்ஸ் இந்த சர்க்யூட் பிரேக்கர்களைத் தொட்டாலும், வர்த்தகம் நிறுத்தப்படும். இன்று நிஃப்டி தன் சர்க்யூட் பிரேக்கரைத் தொட்ட பின் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10 % சர்க்யூட் பிரேக்கர்
நிஃப்டி அல்லது சென்செக்ஸ் 10 சதவிகிதம் சரிந்தால் மட்டும் போதாது, எந்த நேரத்தில் சரிகிறது என்பதைப் பொறுத்து தான் பங்கு வர்த்தக நேரமும் நிர்ணயிப்பார்கள். எனவே எத்தனை மணிக்குள், எவ்வளவு சதவிகிதம் சரிந்தால், எவ்வளவு நேரம் பங்கு வர்த்தகம் நிறுத்தப்படும் என்கிற விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.
விவரங்கள் 10%
10 % சரிந்தால் - 1 மணிக்கு முன் - 45 நிமிடம் பங்கு வர்த்தகம் ரத்து
10 % சரிந்தால் - 1 மணிக்கு மேல் 2.30 மணிக்குள் - 15 நிமிடம் ரத்து
10 % சரிந்தால் - 2.30 மணிக்கு மேல் - வர்த்தகம் ரத்து கிடையாது
விவரங்கள் 15 % & 20 %
15 % சரிந்தால் - 1 மணிக்கு முன் - 1 மணி 45 நிமிடம் பங்கு வர்த்தகம் ரத்து
15 % சரிந்தால் - 1 மணிக்கு மேல் 2 மணிக்குள் - 45 நிமிடம் ரத்து
15 % சரிந்தால் - 2.00 மணிக்கு மேல் - பாக்கி நாள் முழுக்க வர்த்தகம் ரத்து.
இதை எல்லாம் விட பெரிஹாக, சந்தை ஒரே போடாக 20 % சரிந்தால் - எந்த நேரத்தில் சரிந்தாலும், முழு சந்தை நேரமும் பங்கு வர்த்தகம் ரத்து செய்யப்படும்.