நாட்டின் பொதுத்துறை கடன் வழங்குனரான எஸ்பிஐ, கடந்த வார இறுதியில் தனது மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டது. இதற்கிடையில் எஸ்பிஐ வங்கியானது ஆரம்பத்தில் சரிவினைக் கண்ட நிலையில், தற்போது நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது.
இது எஸ்பிஐ வங்கியானது நிகரலாபம் 41% அதிகரித்து, 9,113.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நிபுணர்கள் 9,927.6 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி வருவாயில் எவ்வளவு லாபம்?
லாபம் அதிகரித்திருந்தாலும், ஆரம்பத்தில் பங்கு விலையானது சரிவினைக் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இதன் நிகர லாபமானது வட்டி வருவாய் விகிதமான 31,198 கோடி ரூபாயில் இருந்து, 15.3 சதவீதம் பின்னணியில் நிகர லாப வளர்ச்சி விகிதம் உள்ளது. இது நிபுணர்கள் 31,570 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி அல்லாத வருமானம்
இதே வட்டி அல்லாத வருமானம் கடந்த ஆண்டினை காட்டிலும் 27 சதவீதம் வலர்ச்சி கண்டுள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 37 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் வட்டி வருவாய் விகிதமானது 1.6% ஆக உள்ளது.
செலவினை குறைக்க திட்டம்
இதே செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டை போலவே உள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 6.4 சதவீதம் வளர்ச்சியினை எட்டியுள்ளது. வங்கியின் செலவினங்கள் அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் வரவிருக்கும் காலாண்டுகளில் செலவினத்தினை குறைக்க திட்டமிட்டுள்ளது என இவ்வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.
நோமுரா?
தரகு நிறுவனமான நோமுரா இந்த வங்கி பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 615 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் கடன் செலவினங்கள் அதன் வரலாறு காணாத அளவினை எட்டியுள்ளது. இதற்கிடையில் இதன் நிகர வட்டி மார்ஜின் விகிதமானது மேம்படத் தொடங்கியுள்ளது. இது இனியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரகு நிறுவனங்களின் கணிப்புகள்
கிரெடிட் சூசி தரகு நிறுவனமும் இப்பங்கின் ஏற்றம் தொடரலாம் என்று கணித்துள்ளது. இதன் இலக்கு விலையினை 600 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையானது 580 ரூபாயில் இருந்து 615 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனமும் இப்பங்கின் இலக்கு விலையை 700 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே மெக்வாரி தரகு நிறுவனம் 665 ரூபாயாக இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது.
தற்போதைய பங்கு விலை
இதற்கிடையில் இப்பங்கின் விலையானது தற்போது என் எஸி-யில் 2.47% அதிகரித்து, 455.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 461.50 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 438.85 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 549 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 359.55 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 2.42% அதிகரித்து, 455.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications