இந்தியாவில் வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் வொண்டர் எலக்ட்ரிகல்ஸ் (Wonder Electricals) நிறுவனம் தங்கள் நிறுவன பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பிரிப்பதாக அறிவித்துள்ளது. ஸ்மால் கேப் நிறுவனமான வொண்டர் எலக்ட்ரிகல்ஸின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 591 சதவீதம் அதிகரித்துள்ளது.
தங்கள் நிறுவன பங்கினை சில்லறை முதலீட்டாளர்கள் கணிசமான அளவு வாங்க வேண்டும் என்றும் டிரேடிங் வால்யூம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பங்கு பிரிப்பு நடவடிக்கையை எடுப்பதாக வொண்டர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1,619 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

இந்த நிறுவன பங்கு கடந்த ஓராண்டில் 591 சதவீதம் லாபம் தந்துள்ளது. ஒரு மாத காலத்தில் சுமார் 22 சதவீதம் லாபம் தந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 224 ரூபாய் ஆகும், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 1,619 ரூபாய் ஆகும்.
இந்த நிறுவன பங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று தனது 52 வார கால உச்சத்தை எட்டியது. இந்த நிறுவனம் தங்களது பங்குகளை 1:10 என்று விகிதத்தில் பிரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து நிறுவனத்தின் பங்கு அடுத்தடுத்து இரண்டு நாட்களில் அப்பா சர்க்யூட் நிலையை எட்டியது. 2,125 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் 71 சதவீத பங்கு புரமோட்டோர்கள் வசம் இருக்கிறது. ரீடைல் முதலீட்டாளர்கள் 17 சதவீத பங்கையும் வெளிநாட்டு நிறுவனங்கள் 10. 91% பங்குகளையும் சொந்தமாக வைத்துள்ளனர்.
இதற்கிடையே வொண்டர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் நடத்திய வாரிய குழு இயக்குனர்கள் கூட்டத்தில் நிறுவன பங்கினை அதாவது ஒரு பங்கினை பத்து பங்காக பிரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வாரிய குழு உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு இனி அது 10 பங்கு என மாறும்.
ஆனால் அவர்களின் முதலீட்டு மதிப்பு என்பது அதே அளவில் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் பங்கு மதிப்பு சுமார் 1000 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications