உலக மகா அப்பாடக்கர்களெல்லாம் சொதப்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த கதை!

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல பல முன்னணி பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பார்த்து பார்த்து முதலீடு செய்து பெரிய அளவில் பல்பு வாங்கிய கதையை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். உலக மகா அப்பாடக்கர்களெல்லாம் எப்போதும் அப்பாடக்கராக மட்டுமே இருப்பது இல்லை.

1. வாரன் பஃபெட் மற்றும் டெஸ்கோ (2014):

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷையர் ஹாத்வே இங்கிலாந்தின் முன்னணி ரீடைல் நிறுவனமான டெஸ்கோவில் முதலீடு செய்து பெரும் இழப்பை எதிர்கொண்டார்.

உலக மகா அப்பாடக்கர்களெல்லாம் சொதப்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த கதை!

2013 ஆம் ஆண்டில் லாபத்தை அதிகரித்துக் காட்டியது டெஸ்கோ. இந்த மோசடி பல வருடமாக செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. டெஸ்கோவில் பஃபெட் சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் 3.7 சதவீதப் பங்குகளை வாங்கினார்.

இதனிடையே கணக்கு மோசடி அம்பலமானதால் டெஸ்கோவின் பங்குகள் அதலபாதாளத்தை நோக்கி சரிந்தது. இதனால் பெர்க்ஷையர் ஹாத்வேக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டது.

2. பில் அக்மேன் மற்றும் வேலியன்ட் பார்மாசூடிகல்ஸ் (2016): அமெரிக்காவில் பிரபலமான முதலீட்டாளர்களில் ஒருவரான பில் அக்மேனின் பெர்ஷிங் ஸ்கொயர் கேபிடல் மேனேஜ்மென்ட் வேலியன்ட் பார்மாசூடிகல்ஸில் பெரும்பங்கு மூதலீடு செய்திருந்தது. இந்த நிறுவனமும் கணக்கு வழக்குகளில் தகிடுதத்தங்களை செய்து மாட்டிக் கொண்டது.

வேலியன்டில் அக்மேன் சுமார் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை 2015இன் தொடக்கத்தில் முதலீடு செய்தார். ஆனால் கணக்கு வரவுசெலவில் நடந்த மோசடி அம்பலமானதால் வேலியன்ட் பங்குகளின் விலை மிகவும் குறைந்தது. இதனால் அக்மேன் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்தார்.

3. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸும் (2009):
இந்திய பங்கு சந்தையில் பிக் புல் என்றழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.ஆனால் 2009இல் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூ மிகப் பெரிய அக்கவுன்ட் மோசடியை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

இதனால் சத்யம் நிறுவனத்தின் பங்குகள், சொத்து மதிப்புகள் பறிபோயின. மொத்த இழப்பு சுமார் ரூ.500 கோடி எனத் தெரிய வந்தது.

4. ராதாகிஷன் தமனியும் விஎல்எஸ் பைனான்ஸும் (2001):
இந்திய பில்லியனர் முதலீட்டாளரும் டிமார்ட் நிறுவனருமான ராதாகிஷன் தமனி வங்கி அல்லாத நிதி நிறுவனமான விஎல்எஸ் பைனாஸ் லிமிடெட்டில் முதலீடு செய்தார். முறையற்ற நிர்வாகத்தால் மிகப்பெரிய நிதி இழப்பு விஎல்எஸ் பைனான்ஸுக்கு ஏற்பட்டது.

மிகப்பெரிய அளவில் முதலீடு செய்த தமனிக்கு இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அத்தோடு விஎல்எஸ் பைனாஸ் லிமிடெட்டின் பங்கு விலையும் வெகுவாகக் குறைந்தது.

5. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் ஆப்டெக்கும் (2000):
ஐடி கல்வி நிறுவனமான ஆப்டெக்கில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்தார். இருப்பினும், கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் நிதி சிக்கல்கள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் ஆப்டெக்கின் பங்கு விலை சரிந்தபோது அவர் சவால்களை எதிர்கொண்டார்.

ஆப்டெக் நிறுவனத்தில் ஜுன்ஜுன்வாலாவின் முதலீடு அந்த காலகட்டத்தில் கணிசமான இழப்பை ஏற்படுத்தியது.
மிகவும் புகழ்பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் கூட நிதி கையாளுதலுக்கு இரையாகலாம் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கைகளின் விமர்சன பகுப்பாய்வு அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+