இந்தியாவின் புகழ்பெற்ற உணவு டெலிவரி நிறுவனமான ஸோமேட்டோ (zomato ) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூலை 15ஆம் தேதி பங்குச்சந்தையில் 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் மூலம் ஸோமேட்டோ நிறுவனத்தின் பங்கு தனது 52 வார கால உச்சமான 232 ரூபாயை எட்டியது. கடந்த ஓராண்டுகளாக இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு 185 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது.
ஸோமேட்டோ நிறுவனம் தங்களது செயலியில் பிளாட்பார்ம் கட்டணத்தை ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாய் என உயர்த்தியது. இந்த பிளாட்பார்ம் கட்டணமானது டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸோமேட்டோவின் லாப விகிதத்தில் சற்று மாறுபாடு ஏற்படும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். எனவே தான் பங்கு மதிப்பு 52 வார உச்சத்தை எட்டியது.
இதனிடையே சர்வதேச பங்குச்சந்தை தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி 1 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தால் கூட , இந்த நிறுவனத்தின் மார்ஜினில் 20 அடிப்படை புள்ளிகளை உயர்த்தும் என்றும் நிறுவனத்தின் வளர்ச்சி 5-6 சதவீதம் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பங்கிற்கு "ஓவர் வெயிட்" என மதிப்பீடு தந்துள்ள மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.235 என்ற நிலையை எட்டும் எனக் கூறியது.
எலாரா கேபிடல் நிறுவனம் பிளாட்பார்ம் கட்டண உயர்வின் மூலம் ஸோமேட்டோவின் வருவாய் அதிகரிக்கும் என்றும் லாபம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் உணவு பிரிவு ஆண்டுக்கு 87 கோடி ஆர்டர்களை கையாளும் வகையில் உயரும் என தெரிவித்துள்ளது.
எனவே 1 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு என்பது இந்த நிறுவனத்தின் லாபத்தில் பெருமளவு எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளது. எலாரா நிறுவனம் ஸோமேட்டோ பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது. ஒரு பங்கின் மதிப்பு ரூ. 280 வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனுடைய ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் ஸோமேட்டோவின் பங்குகள் 300 ரூபாயை எட்டும் என தெரிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி ஸோமேட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததை அடுத்து அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 76 ரூபாய் ஆகும். 2024 ஆம் நிதியாண்டில் இறுதிகாலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 3,797 கோடி ரூபாய் அதில் லாபம் 125 கோடி ஆகும். இந்த நிறுவன பங்குகளில் சுமார் 55 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்துள்ளன. 29 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களும் 11.96 சதவீதம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் கொண்டுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications