இந்திய ஸ்டார்ட்அப் துறையின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் ஸ்டார்ட்அப் எகோசிஸ்டத்தையும், ஸ்டார்ட்அப் துறையில் இன்னோவேஷனையும் மேம்படுத்தும் பயணத்தில் உள்ளது. இந்த வளர்ச்சியைப் பெரிய அளவில் கொண்டு செல்ல அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் வேளையில் இத்துறைக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் "ஏஞ்சல் டேக்ஸ்" நீக்கம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
ஏஞ்சல் டேக்ஸ் என்பது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில், இந்திய முதலீட்டாளர் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்றும் போது விதிக்கப்படுவை. அதாவது பங்குகளை வைத்து திரட்டப்பட்ட தொகைக்கு வருமான வரி விதிக்கப்படுவது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 56(2)(viib) இன் கீழ் இத்தகைய நிதி திரட்டலை "income from other sources" என்று கருதி அதற்கு 30% வரி விதிக்கிறது.

இது ஸ்டார்ட்அப்களை எவ்வாறு பாதிக்கிறது?
இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும்பாலும் நிதி திரட்டுவதே பெரும் தலைவலியாக இருக்கும் வேளையில், அவற்றின் அதித செயல்பாட்டுச் செலவுகளுக்கு மேல் வரிச்சுமை என்பது அதன் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. தற்போது ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்பட்டது மூலம் திரட்டப்பட்ட முதலீட்டை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த வரி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்குகளின் "நியாயமான சந்தை மதிப்பு" மீது செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த மதிப்பீடு குறித்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், வருமான வரி அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் வேளையில், ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்படுவது மூலம் இனி மதிப்பீடு குறித்து பிரச்சனை இருக்காது.
வளர்ச்சியைத் தடுக்கிறது: கூடுதல் வரிப் பொறுப்பு முதலீட்டை ஊக்கப்படுத்தலாம், அரசாங்கம் ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதுமை மற்றும் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
சர்வம் லாபம்..
ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்பட்டது மூலம் இப்போது ஏஞ்சல் முதலீட்டிற்கு மிகவும் ஆதரவான சூழலை உருவாக்கும். எனவே மதிப்பீடு, வரி பிரச்சனை இல்லாமல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இனி தங்குதடையின்றி முதலீடு செய்ய முடியும்.
மேலும் இந்த ஏஞ்சல் டாக்ஸ் நீக்கப்பட்டது மூலம் இனி வெளிநாட்டு முதலீடுகளுக்கு இணையாக உள்நாட்டு முதலீட்டாளர்களும் களத்தில் இறங்க முடியும். இதேபோல் இந்த வரி நீக்கத்தால் ஒவ்வொரு முதலீட்டு திரட்டிலிலும் கூடுதல் தொகை கிடைக்கும் காரணத்தால் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications