எம்.எஸ்.எம்.இ (MSME)-க்களுக்கான கடன்களுக்கும் சிபில் ஸ்கோர் அவசியம். கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனாளியின் கடன் தகுதியை தெரிந்து கொள்ள சிபில் ஸ்கோரை பார்க்கின்றனர். எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான கடனிற்கு சில நிறுவனங்கள் கடன் தகுதியை மதிப்பிட டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) மற்றும் சிட்பி (SIDBI) இணைந்து உருவாக்கியுள்ள சிபில் எம் எஸ் எம் இ (Cibil MSME) முறையையும் பயன்படுத்துகின்றன.
குறைந்தபட்ச சிபில் ஸ்கோர்?:
பொதுவாக பெரும்பாலான கடன் வழங்கும் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ-களுக்கு கடன் வழங்க குறைந்தபட்சம் 700 சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 650 - 685 சிபில் ஸ்கோர் இருந்தால் கூட கடன் வழங்குகின்றன. ஆனால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம். இது ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்து மாறுபடலாம். இருப்பினும் பொதுவான வரம்பு என ஒன்று உள்ளது.

அதாவது சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் மிக சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு கடன் வழங்க வாய்ப்புகள் அதிகம். வட்டியும் குறைவாக இருக்கும். இதுவே 700 - 749 நன்றாக உள்ளதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலான நிதி நிறுவனங்கள் இதை சிறந்த ஸ்கோராக எடுத்துக் கொள்கின்றன.
650 - 699 சராசரி சிபில் ஸ்கோராக பார்க்கப்படுகிறது. இந்த விகிதத்தில் உள்ளவர்களுக்கு கடன் வழங்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும்.
650-க்கு கீழ் இருந்தால் மோசமான சிபில் ஸ்கோர் ஆகும். அப்படி இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு கடன் நிராக்கரிப்படலாம். ஆக பிணையத்துடன் கூடிய மாற்றுக் கடன்களுக்கு முயற்சிக்கலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?:
எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு கடன் ஒப்புதல் கிடைத்தாலும், அவர்களுக்கான வட்டி விகிதம் என்ன, செயல்பாட்டு கட்டணம் உள்ளிட்ட மற்ற கட்டணங்கள் எவ்வளவு என தெரிந்து கொள்ள வேண்டும். முத்ரா லோன் போன்ற பிரத்யேக திட்டங்களில் வட்டி சற்று குறைவாக இருக்கலாம். ஆக தொழில் முனைவோர் தங்களுக்கு அதுபோன்ற திட்டங்கள் பொருந்துமா என்பதையும் முழுமையாக தெரிந்து கொண்டு, பின்னர் வணிக கடனை நாடலாம்.
ஒரு தனி நபர் அல்லது நிறுவனமாக இருந்தாலும், செயலில் உள்ள உதயம் பதிவு வைத்திருக்க வேண்டும். அவர்கள் குறு நிறுவனமா அல்லது சிறு நிறுவனம், நடுத்தர நிறுவனம் என எதுவாக இருந்தாலும், எம்.எஸ்.எம்.இ வகைகளின் கீழ் இருந்தால் போதுமானது.
பெரும்பாலான வங்கிகள் எம்.எஸ்.எம்.இ-களுக்கு கடன் வழங்க விரும்பினாலும், குறைந்தபட்ச, ஒரு வருடத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை வணிகம் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆக நீண்ட காலமாக வணிகத்தில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அப்படியானால் புதிய நிறுவனங்களுக்கு கடன் கிடைக்காது என்றில்லை. புதிய நிறுவனங்களுக்கு முத்ரா போன்ற குறிப்பிட்ட திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வருமானத்தின் நிலைத்தன்மையை காட்டுவதற்காக விண்ணப்பதாரர்கள், பொதுவாக கடந்த 1 முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான ஐடிஆர் விவரங்களை வழங்க வேண்டும். இது உங்கள் வணிகத்தின் விற்றுமுதல் மற்றும் லாபத்திற்கு ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) திட்டத்தின் காரணமாக, சில கடன்களுக்கு (குறைந்த வரம்பு கொண்டவை) பிணையம் தேவையில்லை. அவை அரசு ஆதரவு திட்டங்களின் கீழ் வருகின்றன. இருப்பினும், அதிக கடன் தொகைகளுக்கு பிணையம் தேவைப்படலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் எம்.எஸ்.எம்.இ -கடன்களை அங்கீகரிக்க சரியான ஆவணங்களை பராமரிப்பது மிக அவசியம். பொதுவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடையாளச் சான்று, வசிப்பிட சான்று, வணிக முகவரி சரிபார்ப்பு, நிறுவன பதிவு சான்றிதழ், வருமான வரி அறிக்கைகள் மற்றும் உத்தரவாதம் அளிப்பவரகளின் சொத்து விவரங்கள் பற்றிய ஆவணங்கள், ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவும் தேவைப்படலாம். இது பொதுவான அறிக்கை மட்டுமே. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!:
கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பே சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி, தெளிவாக அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு அதன் பிறகு கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பாக உங்கள் வணிகத்திற்கு அரசின் பிரத்யேக திட்டங்கள் மூலம் பயன் பெற முடியுமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பொருந்தினால், மானியத்துடன். பிணையம் இல்லாமல் கடன் பெற முடியும். வட்டியும் சற்று குறைவாக இருக்கலாம். சில திட்டங்களில் குறு நிறுவனங்களுக்கு கடன் தடை காலம் கூட அவகாசமாக கொடுக்கப்படுகின்றன. ஆக இதுபோன்ற சலுகைகள் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகே வங்கிகளில் நேரடியாக அணுகலாம். உங்கள் வணிகத்திற்கு எந்த மாதிரியான அரசின் சலுகைகள் எல்லாம் கிடைக்கும் என, மாவட்ட எம்.எஸ்.எம்.இ மையங்களை நாடினாலே தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications