மும்பை: பிளிப்கார்ட் என்ற ஈ-காமர்ஸ் தளத்தை உருவாக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த சச்சின் பன்சால், இந்தியாவின் முக்கியமான தொழில் முனைவோராக கருதப்படுகிறார்.
பிளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்ட இவர், நிதியியல் சேவை துறையில் நவி என்ற ஒரு ஸ்டார்ட் அப்பை நிறுவி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தன்னுடைய பணிகள் குறித்து மணி கண்ட்ரோல் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய நேரம் முழுவதையும் நவி நிறுவனத்தை மேம்படுத்துவதற்கே ஒதுக்குவதாகவும், ஒரு வாரத்தில் 80 முதல் 100 மணி நேரங்கள் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். வார நாட்கள் மட்டுமின்றி வார இறுதி நாட்களில் கூட தான் பணி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சச்சின் பன்சால் 2018ஆம் ஆண்டு நவி என்ற ஃபின்டெக் ஸ்டார்ட் அப்பை தொடங்கினார். அப்போது பெரும்பாலும் இதன் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரிந்தனர். ஆனால் அது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ள சச்சின் பன்சால் தன்னுடைய நிறுவனத்தில் வெறும் ரிமோட் பணிகளுக்கு ஒருபோதும் இடமில்லை எனக் கூறியுள்ளார். ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு என்றும் கூறியுள்ளார்.
தன்னுடைய இந்த நிலைப்பாட்டினை கண்டு பணியாளர்கள் தன்னை வெறுக்க கூடும் ஆனால் அலுவலகத்தில் இருந்து பணி புரிவதையே தான் விரும்புவதாகும் தெரிவித்துள்ளார். தாங்கள் தற்போது 100% அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.
தற்போது தான் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வதை கூட நிறுத்திவிட்டு தன்னுடைய முழு நேரத்தையும் நவி நிறுவனத்திற்காகவே ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார். இதனால் வார இறுதி நாட்களில் கூட தான் வேலை செய்வதாக கூறும் அவர், இதனால் ஊழியர்களும் குடும்பத்தினரும் என்னை வெறுக்கலாம் என கூறியுள்ளார். நான் இவ்வாறு வேலை செய்கிறேன் என்பதற்காக மற்றவர்களும் இதேபோல பணி செய்ய வேண்டும் நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
நவி என்பது 2018ஆம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் அங்குத் அகர்வால் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்ட நிதி சேவைகளை வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் டிஜிட்டல் கடன்கள், வீட்டுக் கடன்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், மருத்துவ காப்பீடு, டிஜிட்டல் தங்கம் மற்றும் மைக்ரோ கடன்களை வழங்கும் சேவைகளை செய்து வருகிறது இந்த நிறுவனத்தின் வருவாய் 100 மில்லியன் டாலர்கள் ஆகும், லாபம் 10 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications