ஐடி வேலையை விட்டுவிட்டு மாட்டு பண்ணை வைத்த கணவன் - மனைவி.. கையில் இப்போ 2 கோடி..!!

அகமதாபாத்: இந்தியாவில் மக்களின் தேவையை அறிந்து தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்கள் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை அடைந்து விடுகின்றன. அதற்கு உதாரணமான ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம்.

2017 ஆம் ஆண்டு அகமதாபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் மால்டே மற்றும் அவரது மனைவி சார்மி மால்டே ஆகியோர் இணைந்து கவ்நீதி ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய நிறுவனம்தான் இது.

ஐடி வேலையை விட்டுவிட்டு மாட்டு பண்ணை வைத்த கணவன் - மனைவி.. கையில் இப்போ 2 கோடி..!!

ஸ்ரீகாந்த் மற்றும் சார்மி ஆகிய இருவரும் ஐடி துறையில் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர். அங்கே இவர்களுக்கு நல்ல ஊதியம் ஊதியமும் கிடைத்தது இதனிடையே 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த்தின் தந்தை புற்றுநோயால் இறந்தார். அப்பொழுது தான் ஸ்ரீகாந்திற்கு நமது வாழ்க்கைமுறை மற்றும் நமது உணவு பழக்க வழக்கங்கள் குறித்து கவனம் திரும்பியது.

தன்னுடைய உணவு பழக்க வழக்க முறையை மாற்றியவர், முற்றிலும் இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே உண்ணத் தொடங்கினார். பின்னர் இதனையே ஏன் ஒரு தொழிலாக நாம் மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது . ஐடி வேலையை விடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி சார்மி இணைந்து 2017 ஆம் ஆண்டில் கவ்நீதி ஆர்கானிக் பிரைவேட் லிமிடெடை தொடங்கினர்.

உள்ளூரிலிருந்து விவசாயிகள் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் சென்று பயிற்சி பெற்ற இவர்கள் மாட்டுப் பண்ணை அமைத்து இயற்கையான தீவனம் கொடுத்து முதலில் நான்கு மாடுகளை வளர்த்தனர்.

பால் மற்றும் அதன் மூலம் உற்பத்தி செய்த நெய் ஆகியவற்றை முதல் கட்டமாக தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்கள் இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்ததை அடுத்து இதனை ஒரு பெரிய தொழிலாக மாற்றினர்.

இதன்படி தற்போது கவ்நீதி நிறுவனம் உயர்தரத்திலான பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பால் ,பன்னீர், நெய் ,நெய் பிஸ்கட் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படக்கூடிய ஊதுபத்தி உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்து வருகிறது.

"இதற்கு முன்பு தாங்கள் பார்த்த ஐடி வேலையைப் போல கிடையாது இது 365 நாளும் செய்ய வேண்டிய வேலை" என கூறுகிறார் ஸ்ரீகாந்த். தீபாவளியாக இருந்தாலும் சரி புத்தாண்டாக இருந்தாலும் சரி நாங்கள் தினமும் மாடுகளுக்கு தீவனம் வைக்க வேண்டும், பால் கறக்க வேண்டும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களது நிறுவனம் தற்போது 100 மாடுகளுடன் செயல்பட்டு வருவதாக கூறும் அவர் அமேசான் உள்ளிட்ட தளங்கள் வாயிலாகவும் தங்களது பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கிறார்.

2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 300 பேருக்கு வேலை வாய்ப்பும் தந்துள்ளது. தங்கள் பண்ணைகளில் வேலை செய்யக்கூடிய விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்காகவும் இவர்கள் நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+