அண்மை காலமாக டிஜிட்டல் நாணயமான கிரிப்டோ கரன்சிகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அந்த துறையில் கால்பதித்த சிறிது காலத்திலேயே கோடீஸ்வரராக உயர்ந்திருக்கிறார் ஒரு இளைஞர்.
கிரிப்டோ கரன்சி என்பது ஒரு டிஜிட்டல் சொத்து. குறிப்பிட்ட வகையிலான கிரிப்டோ கிராபியை பயன்படுத்துவதன் மூலம் பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படுகின்றன. சில நாடுகள் கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரித்துள்ளன. இந்தியா இதுவரை கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரிக்கவில்லை.

ஐஐடி படிப்பை பாதியில் விட்டு சென்ற ராகுல்: ராகுல் என்ற இளைஞர், மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி அறிவியல் பிரிவில் இளநிலை படிப்புக்காக சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அவருக்கு பொருளாதாரத்தில் ஆர்வம் இருப்பதை உணர்ந்தார்.
எனவே ஐஐடி படிப்படை பாதியிலேயே விட்டு விட்டு அமெரிக்காவின் தி வார்டன் பள்ளியில் பொருளாதாரத்தில் கல்வி பயில சென்றார். 2015 முதல் 2019 வரை தி வார்டன் பள்ளியில் பொருளாதாரம் பயின்ற ராகுல், பின்னர் மோர்கன் ஸ்டான்லியில் ஒரு ஆய்வாளராக தனது பணியை தொடங்கினார்.
2021இல் தொடங்கப்பட்ட காமா பாயிண்ட் கேப்பிடல்: கடந்த 2020 ஆம் ஆண்டில் ராய் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பினார். இங்கு நண்பர்கள் ஈஷ் அகர்வால் மற்றும் சனத்ரா ஆகியோருடன் இணைந்து காமா பாயிண்ட் கேப்பிடல் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் இது முகமை ஆகும்.
தொடங்கிய 5 மாதங்களில் 255 கோடிக்கு விற்பனை: சில மாதங்களுக்குள் காமா பாயிண்ட் கேப்பிடல் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான தேர்வாக மாறியது. அப்போது தான் தி பிளாக் டவர் கேபிடல் நிறுவனம் , காமா பாயிண்ட் கேப்பிடல் நிறுவனத்தை வாங்க முன் வந்தது.
நிறுவனம் தொடங்கிய 5 மாதங்களிலேயே சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 255 கோடி ரூபாய்க்கு விலை போனதால் ராகுல் ராய் மற்றும் நண்பர்கள் அதனை விற்பனை செய்து லாபமடைந்தனர்.
தற்போது ராகுல் ராய் பிளாக் டவர் கேப்பிடல் நிறுவனத்தில் சந்தை நடுநிலைத்துறையின் இணைத்தலைவராக ராய் பணியாற்றி வருகிறார். பிளாக் டவர் காமா பாயிண்ட் சந்தை நடுநிலை நிதியை அவர் இயக்கி வருகிறார்.
இது கிரிப்டோ கரன்சி மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ரிஸ்க் குறைவான வழியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக தெரிகிறது. கிரிப்டோ உலகின் ஒரு சக்தி வாய்ந்த நிறுவனமாக தி பிளாக் டவர் கேபிடலை உருவாக்குவதே தனது இலக்கு என ராகுல் ராய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் நிச்சயம் நல்ல வளர்ச்சி அடையும் துறையாக இருக்கும் என நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications