நடப்பு நிதியாண்டில் 2020 -21-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்படும். இந்த வீழ்ச்சியால், கார்ப்பரேட் இந்தியாவின் வளர்ச்சியில் 15 சதவீதம் வரை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இதனால் சிறு வணிகங்களும் பெரும் அளவு பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கொள்கை தலையீடுகள் சிறிய நம்பிக்கையை அளிக்கின்றன. எனினும் அவர்களால் தேவையை புதுபிக்க முடியாது. இது சிறு வணிகங்களுக்கு முக்கியமானது என்று அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை 21 சதவீதம் வரை வருவாயில் கூர்மையான சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம் இயக்க லாப அளவு 4 - 5 சதவீதமாகக் குறையும் என்று உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான கிரிசிலின் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தால் பொருளாதாரத்தில் 5 சதவீத வீழ்ச்சியினை எதிர்பார்க்கிறது. இது நாடு முழுவதும் கிட்டதட்ட மூன்று மாதங்கள் பூட்டப்படுவதற்கு வழிவகுத்தது. எனினும் தற்போது சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரிவுக்கு, 3 டிரில்லியன் ரூபாய் வரை பிணை இல்லாத கடன்கள் வரை ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் ஏற்கனவே அறிவித்துள்ளன.
கொரோனாவால் எம்எஸ்எம்இ-க்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. இதனால் அவற்றின் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடன் தகுதியும் பாதிக்கலாம். மேலும் இது மூலதன பணப்புழக்கத்தினை மோசமாக்கும் என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ -க்கள் குறைந்த மூதலன பொருட்கள் விலையில் இருந்து, லாபம் ஈட்டப்பட வேண்டும் என்று அது கூறியது. ஆனால் பொருளாதாரத்தில் பலவீனமான தேவை, சிறு வணிகப் பிரிவில் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று அது கூறியுள்ளது.
இது ஒட்டு மொத்த எம்எஸ்எம்இ கடனில் 32 சதவீதத்தினைக் கொண்டிருக்கும், மைக்ரோ எண்டர்பிரைசஸ் பிரிவே மிகக் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் வருவாய் வளர்ச்சி மற்றும் இயக்க லாப அளவு மற்றும் செயல்பாட்டு மூலதன நீட்டிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவை பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் எம்எஸ்எம்இ துறையானது பெரும் அழுத்ததினை காணலாம் என்றும் கூறப்படுகிறது..
More From GoodReturns

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!



Click it and Unblock the Notifications