இந்திய உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக இருக்கும் MSME நிறுவனங்கள் கொரோனா தொற்றால் மோசமான நிலையில் இருக்கிறது. ஆனால் இந்த நிலை பெரிய அளவில் மாறுவது மட்டும் அல்லாமல் விரைவில் MSME இந்திய வர்த்தகச் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச MSME தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
எதற்காக இந்த MSME தினம்..?
MSME பிரிவில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வர்த்தக இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகவும், இன்னோவேஷன் & கிரியேடிவிட்டி அதிகரிக்க வேண்டும் என்றும், உலகளவில் MSME நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சர்வதேச MSME தினம் கொண்டாடப்படுகிறது.
MSME நிறுவனங்கள்
இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து நாடுகளிலும் MSME நிறுவனங்கள் பெரிதும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக 2020 கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் மூலம் இந்தியாவில் இருக்கும் MSME நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், மத்திய அரசு பெரிய அளவிலான கடன் திட்டத்தை அறிவித்தது.
75,000 கோடி ரூபாய் கடன் திட்டம்
மத்திய அரசின் ஒப்புதலுடன் 2020ல் MSME நிறுவனங்களைப் பாதிப்பில் இருந்து மீட்டு எடுப்பதற்காகச் சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிலான கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வேகமாக ஒப்புதல், விரைவான பணப் பட்டுவாடா எனப் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.
MSME ஆதிக்கம்
சர்வதேச சிறு வர்த்தக அமைப்பின் தரவுகள் அடிப்படையில் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 70 சதவீத வேலைவாய்ப்பும், 50 சதவீத ஜிடிபி-யும் MSME நிறுவனங்கள் வாயிலாகத் தான் வருகிறது. ஒருபக்கம் MSME சிறுமையாகப் பார்க்கப்பட்டாலும் நாட்டின் பெரும் பகுதி வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை MSME நிறுவனங்கள் தான் உருவாக்குகிறது.
MSME வரலாறு
MSME நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து 74வது ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில், ஜூன் 27ஆம் தேதி சர்வதேச MSME தினம் ஆக (International MSMEs Day) கொண்டாட அறிவித்தது. இதன் மூலம் கடந்த 5 வருடங்களாகச் சர்வதேச MSME தினம் (International MSMEs Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
250 ஊழியர்கள்
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் கிட்டதட்ட 250 ஊழியர்களுக்குக் குறைவாக இருக்கும் நிறுவனங்களை MSME பிரிவில் சேர்க்கப்படுகிறது. இந்த MSME பிரிவுக்குள்ள வருமானம், ஊழியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications