வீணாகத் தூக்கி எறியப்படும் தேங்காய் சிரட்டைகள் மூலம் கைவினைப் பொருட்களைத் தயாரித்து மாதம் 7 முதல் 8 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் தொழிலதிபரான மரியா குரியகோஸ் என்பவர்.
திருச்சூரைப் பூர்விகமாக கொண்ட மரியா, மும்பையில் இளங்கலை பட்டமும், ஸ்பெயினில் முதுகலை பட்டமும் பெற்றவர்.பட்டப்படிப்பை முடித்தவுடன் மும்பையில் உள்ள கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சிறுவயது முதலே மரியா அவர்களுக்கு தொழில் தொடங்கும் ஆசை ஏற்பட்டுள்ளது, ஆனால் அது எந்தத் தொழில் என்பதில் அவருக்கு அப்போது ஐடியா இல்லை. சொந்த ஊரில் மரியா இருந்தபொழுது அங்கு தேங்காய் சிரட்டைகள் அதிக அளவு குப்பையில் வீசப்படுவதை கண்டுள்ளார்.
பிஸ்னஸ் ஐடியா
ஆனால் அது மேற்கத்திய நாடுகள் பல வகைகளில் பயன்படுத்து வருவதையும் நன்கு அறிந்தவர் என்பதால், இந்தியாவில் அதை வெறும் அடுப்பு எரிக்க கரியாக மட்டுமே பயன்படுத்துவதை அறிந்துள்ளார். அதன்பின் தேங்காய் சிரட்டைகளை வைத்து கைவினைப் பொருட்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதன்பின் சிரட்டைகளில் கிண்ணங்கள் உட்பட அழகிய பொருட்களை தயாரித்து, சந்தையில் அதற்கான இடத்தையும் ஏற்படுத்தி 'தேங்கா' 'Thenga' என்ற பிராண்ட்டை உருவாக்கியுள்ளார்.
ஆரம்பம் அவ்வளவு எளிதல்ல!
2019 ஆம் ஆண்டு தேங்காய் சிரட்டைகள் கொண்டு மக்களுக்கு உதவும் வகையில் கைவினைப் பொருட்களை தயாரிக்க நினைத்த மரியா, அது தொடர்பான கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களை சந்தித்து நுணுக்கங்களை கற்றுள்ளார்.
இது புதிய தொழில் என்பதால் சரியாக போகுமா என்பது தெரியாததால், ஆரம்பத்தில் தானே சில கைவினைப் பொருட்களை தயாரித்தாக மரியா கூறியுள்ளார்.
முதல் ஆர்டர்!
தொடக்கத்தில், சில தயாரிப்புகளை சாம்பிள்காக ஈகோ ப்ரெண்ட்லி தயாரிப்புகளை விற்கும் கடைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததுடன், 100 கிண்ணங்களுக்கான ஆர்டரும் கிடைத்ததுள்ளது. அந்த முதல் ஆர்டரை அவரின் பெற்றோர்கள் உதவியுடன் செய்து முடித்துள்ளார்.
அதன்பின் அவரின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, ஆர்டர்களும் குவியத் தொடங்கியவுடன் 12 பணியாட்களை வைத்து இன்று ஆண்டுக்கு 8000 சிரட்டை தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார்.
தயாரிப்பில் உள்ள சிரமங்கள்!
தேங்காய் சிரட்டைகள் பொதுவாக சரியான அளவில் கிடைக்காது, அதனால் அவர்கள் சரியான சிரட்டைகளை தேர்வு செய்ய பல மூட்டைகளை வாங்கி அதிலிருந்து தேவையான சிரட்டைகளையே தேர்வு செய்ய முடியும் எனவும், அதன் மூலமாக தான் சரியான கைவினைப் பொருட்களை தயாரித்து கொடுக்க முடியும் எனவும் மரியா தெரிவித்துள்ளார்.
மேலும் சிரட்டைகள் குறிப்பிட்ட அழுத்தத்தை மட்டுமே தாங்கும் என்பதால் அதை கவனமாக கையாள வேண்டும் எனவும் கூறுகிறார்.
வருமானம்
Thenga பிராண்ட் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மரியா சுமார் 4,000-5,000 தேங்காய் பொருட்களை விற்பனை செய்து, இதன் மூலம் தற்போது மாதம் ரூ.7-8 லட்சம் சம்பாதிக்கிறார்.
டிஜிட்டல் பிஸ்னஸ்
அவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் மொத்தமாக ஆர்டர் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள். தெங்கா கோகோவின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இந்த பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications