ஒவ்வொரு ஆண்டும் மத்திய மாநில அரசுகள் பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாகப் பல துறை சார்ந்த அமைப்புகள், அவரவர் துறைக்கான கோரிக்கைகளை அரசுகளிடம் முன்வைப்பது வழக்கம். அப்படி அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அரசுக்கும், மக்களுக்கும் , பொருளாதாரத்திற்கும் சாதகமாக இருப்பின் அரசு அதை நடைமுறைப்படுத்தும்.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்களின் தலையாய அமைப்பான நாஸ்காம், வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட்அப்கள், தற்போதுள்ள வெளிப்புற கட்டமைப்புகளுக்குள்ளேயே, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட அனுமதி அளிக்க 2024-25 பட்ஜெட்-க்கு முக்கியப் பரிந்துரையாக முன்வைத்துள்ளது.

நாஸ்காம் செய்த ஆய்வில் பங்கேற்ற 139 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 16.5 சதவீத இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் externalised legal structures கீழ் உள்ளது. தற்போது மத்திய அரசு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதித்தால் 16.5 சதவீத இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஐபிஓ வெளியிட்டு நிதி திரட்ட தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பே நாஸ்காம் அமைப்பு, சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மற்றும் நிதி அமைச்சகம் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஸ்டார்ட்அப்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான ப்ரேம்வொர்க் குறித்து ஆலோசனை செய்துள்ளது.
ஆனால் முதல் முறையாக நாஸ்காம் பட்ஜெட் பரிந்துரையாக முன்வைத்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறையில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தான் ஐபிஓ வெளியிட முடியும். இந்த விதிமுறை தளிர்க்கப்பட்டால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவில் வரிப் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு ICEA அமைப்பு உலகில் 7 முக்கிய உற்பத்தி நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
இதையடுத்து மத்திய அரசு நாளை இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் வேளையில் இன்று பல்வேறு உதிரிபாகங்களின் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications