சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன்.. மோடி அதிரடி..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் அளிக்கக் கூடிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை 59 நிமிடத்தில் பெற முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது மட்டும் இல்லாமல் 12 முக்கிய அறிவிப்புகளைத் தீபாவளி பரிசாக அளித்துள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வர இருக்கும் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும் போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு நலிவடைந்துள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோடியின் இன்றைய அறிவிப்பு இருந்தது.

கடன்

கடன்

மோடி அவர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் அளிப்பது மட்டும் இல்லாமல் அவற்றில் செய்யப்படும் முதலீட்டினை 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி விலக்கு

ஜிஎஸ்டி விலக்கு

சிறு நிறுவனங்கள் 1 கோடி ரூபாய் வரை கடன் பெற்று இருக்கும் போது அவற்றுக்கு 2 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பரிசு

தீபாவளி பரிசு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தற்போது அளிக்க உள்ள 12 ஆலோசனைகள் தீபாவளி பரிசாக மட்டும் இல்லாமல் புதிய வரலாற்றினைப் படைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+