கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்முனைவோர்களை (MSME) ஊக்குவிக்கவும், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும், மத்திய அரசு, சமீபத்தில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு Emergency Credit Line Guarantee Scheme (ECLGS)-மைத் அறிவித்தார்கள்.
இந்த 3 லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டம் தான் இணையத்தில் பரவலாக பேசப்படும் MSME Loan Scheme. பிணை இல்லாக் கடன். முதல் 12 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்த வேண்டாம். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. மொத்தம் 4 ஆண்டு கடன் காலம்.
இந்த கடன் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள Laghu Udyog Bharti (LUB) என்கிற ஆர் எஸ் எஸ்-ன், தொழில் அமைப்பின் பொதுச் செயலர் கோவிந்த் லிலேவை அழைத்து கருத்துக்களைக் கேட்டு இருக்கிறார் நிதி அமைச்சர்.
அரசு வங்கிகள்
அதற்கு பதிலளித்த கோவிந்த், பொதுத் துறை வங்கிகள், அரசின் கடன் திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் வங்கிக் கிளைகளில், MSME-யினருக்கான கடனை அப்ரூவ் செய்யும் போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் லாப விவரங்களைக் கேட்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமே புகார் சொல்லி இருக்கிறாராராம்.
தனியார் வங்கிகள்
சரி அரசு வங்கிகளில் பிரச்சனை இப்படி போகிறது, தனியார் வங்கிகளில் நிலைமை என்ன..? "தனியார் வங்கிகள் மத்திய அரசின் MSME-யினருக்கான கடன் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாமல், தாமதித்துக் கொண்டு இருக்கிறார்கள்" என நெற்றியில் அடித்தாற் போல நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சொல்லி இருக்கிறார் கோவிந்த் லிலே.
பெரிய கடன்கள் மட்டும்
அதோடு விட்டாரா என்றால் இல்லை. "வங்கிகள் தங்கள் கடன் இலக்கை அடைய, நிறைய கடன் வாங்கும் பெரிய வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே அதிகம் கடன் கொடுக்கிறார்கள். வங்கிகள், Emergency Credit Line Guarantee Scheme (ECLGS)-ல் எல்லா தரப்பினருக்கும் கடனை வழங்கச் சொல்லி அரசு அறிவுறுத்த வேண்டும்" எனவும் சொல்லி இருக்கிறாராம்.
கூட்டுறவு வங்கிகள்
இது போக, Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) திட்டத்தில், பட்டியலிடப்படாத கூட்டுறவு வங்கிகளையும் (Non Scheduled Co-Op Bank) இணைக்கச் சொல்லி, கோவிந்த் கோரிக்கை வைத்து இருக்கிறாராம். நிறைய MSME-க்கள் பட்டியலிடப்படாத கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications