இந்தியாவில் மிக அதிகளவில் கடன் அளித்துள்ள ஒரு நிறுவனம் என்றால் அது கண்டிப்பாகப் பாரத ஸ்டேட் வங்கியே ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தினால் ஃபின்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாமல் இருந்த நிலையில் அதற்கான விதிகளை மாற்றி அமைக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் துறை நிறுவனம்
பொதுத் துறை நிறுவனம் என்பதால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது மிகப் பெரிய ரிஸ்க் ஆக உள்ளது. ஆனால் பாரம்பரிய முதலீட்டு முறை மட்டுமே பயன் அளிக்காது என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றும் எஸ்பிஐ வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முதலீடு
எஸ்பிஐ வங்கி ஃபின் - டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றும் அதற்காக விதிமுறைகள் மாற்றப்பட உள்ளது என்றும் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் - ஓலா
பிளிப்கார்ட், ஓலா போன்று நாட்டின் வலிமையை அதிகரிக்கக் கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு என்றே நிதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் அதற்காக வங்கி பேர்டு உறுப்பினர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொள்முதல்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது மட்டும் இல்லாமல் இது போன்ற நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை, தொழில்நுட்பங்களைக் கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
கூட்டுக் கண்டுபிடிப்பு மையம்
சமீபத்திய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக நவி மும்பை பகுதியில் 25 கோடி முதலீட்டில் கூட்டுக் கண்டுபிடிப்பு மையம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள்
எஸ்பிஐ வங்கியில் 430 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் 150 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவியில் சாட் பாட், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற பல் தொழில்நுட்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல சேவைகளை எளிமையாக்கும் வகையில் சிறந்த தீர்வுகளும் வழங்கப்பட உள்ளது.
எஸ்பிஐ வங்கி
தற்போது எஸ்பிஐ வங்கி நவி மும்பை பெலப்பூரில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப மையத்தில் இருந்து இயங்கி வருகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications