இந்தியாவில் மிக அதிகளவில் கடன் அளித்துள்ள ஒரு நிறுவனம் என்றால் அது கண்டிப்பாகப் பாரத ஸ்டேட் வங்கியே ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தினால் ஃபின்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாமல் இருந்த நிலையில் அதற்கான விதிகளை மாற்றி அமைக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் துறை நிறுவனம்
பொதுத் துறை நிறுவனம் என்பதால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது மிகப் பெரிய ரிஸ்க் ஆக உள்ளது. ஆனால் பாரம்பரிய முதலீட்டு முறை மட்டுமே பயன் அளிக்காது என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றும் எஸ்பிஐ வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முதலீடு
எஸ்பிஐ வங்கி ஃபின் - டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றும் அதற்காக விதிமுறைகள் மாற்றப்பட உள்ளது என்றும் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் - ஓலா
பிளிப்கார்ட், ஓலா போன்று நாட்டின் வலிமையை அதிகரிக்கக் கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு என்றே நிதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் அதற்காக வங்கி பேர்டு உறுப்பினர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொள்முதல்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது மட்டும் இல்லாமல் இது போன்ற நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை, தொழில்நுட்பங்களைக் கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
கூட்டுக் கண்டுபிடிப்பு மையம்
சமீபத்திய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக நவி மும்பை பகுதியில் 25 கோடி முதலீட்டில் கூட்டுக் கண்டுபிடிப்பு மையம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள்
எஸ்பிஐ வங்கியில் 430 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் 150 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவியில் சாட் பாட், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற பல் தொழில்நுட்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல சேவைகளை எளிமையாக்கும் வகையில் சிறந்த தீர்வுகளும் வழங்கப்பட உள்ளது.
எஸ்பிஐ வங்கி
தற்போது எஸ்பிஐ வங்கி நவி மும்பை பெலப்பூரில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப மையத்தில் இருந்து இயங்கி வருகிறது.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications