பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனர்களான குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் தங்களது சொந்த முதலீட்டு நிறுவனமான டைட்டன் கேப்பிட்டல் வாயிலாக, வீட்டு சேவை தளமான அர்பன் கம்பெனி-யில் தாங்கள் வைத்திருந்த பங்குகளை மொத்தமாக விற்பனை செய்து முழுமையாக வெளியேறி உள்ளனர்.
இந்த பங்கு விற்பனை மூலம், 9 ஆண்டுகளுக்கு முன்பு செய்த அவர்களின் சிறிய அளவிலான முதலீடு சுமார் 200 மடங்கு அதிக லாபத்தை தற்போது ஈட்டியுள்ளனர்.

கூர்கிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்ட அர்பன் கம்பெனி-யில் குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் 2015 ஆம் ஆண்டு ரூ.57 லட்சம் முதலீடு செய்திருந்தனர். இந்த முதலீட்டை இதுவரையில் தொடாமல் அப்படியே வைத்திருந்தனர்.
கடந்த 9 வருடத்தில் அர்பன் கம்பெனி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்த வளர்ச்சியை பணமாக்க முடிவு செய்த இவரும், இந்த மாத தொடக்கத்தில் தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்காக, வை கேபிட்டலின் துணை நிறுவனமான தாரணா கேபிட்டல் உடன் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 50 மில்லியன் டாலருக்கு இரண்டாம் நிலை பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பங்கு விற்பனை நிறைவடைந்த, ரூ.57 லட்சம் முதலீடு தற்போது 200 மடங்கு உயர்ந்து மொத்தம் ரூ.111 கோடி லாபத்தை குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்த இரண்டாம் நிலை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டைட்டன் கேபிட்டலின் நிறுவனர்களுடன் சில அர்பன் கம்பெனி ஊழியர்களும் தங்கள் பங்கு விற்றுள்ளனர். அர்பன் கம்பெனி பங்குகளை வாங்கியதன் மூலம் தரணா கேபிட்டலின் நிறுவனர் மற்றும் மேனேஜிங் பார்ட்னரான வம்சி துவ்வூரி, உபர் கம்பெனி இயக்குநர் குழுவில் செயல்படாத இயக்குனராக இணைந்துள்ளார்.
குணால் பஹால் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் உருவாக்கிய டைட்டன் கேபிட்டல் 100 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட லாபத்தை ஈட்டியுள்ள மற்ற முதலீடுகளும் உள்ளது. இதில் முக்கியமாக ஒலா கேப்ஸ், ஆஃப் பிசினஸ் மற்றும் கிரெட்ஜெனிக்ஸ் ஆகியவை அடங்கும்.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications