ஈரான் போர் உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. போர் தொடங்கிய முதல் ஒருவார காலம் பெரிய அளவில் எந்த நாடுகளும் அதன் பாதிப்பை கணிக்கவில்லை. ஆனால் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் பல்வேறு நாடுகளிலும் ஈரான் போரின் தாக்கம் மிக வலுவாக எதிரொலிக்கிறது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ,எல்பிஜி தட்டுப்பாடு, உரங்களுக்கான தட்டுப்பாடு என வரிசையாக அடுத்தடுத்த பிரச்சினைகளை உலக நாடுகள் எதிர்கொள்ள தொடங்கியிருக்கின்றன. நிலைமை இப்படியே சென்றால் ஒட்டுமொத்த உலகின் உணவு பாதுகாப்புக்கே பிரச்சனை வரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. போர் தொடங்கிய மூன்று வார காலம் முடியப்போகிறது இருந்தாலும் போர் எதை நோக்கி செல்கிறது என்பதை இதுவரை தெரியவில்லை.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பெருமளவிலான ஆயுதங்களை போரில் பயன்படுத்தி இருக்கின்றன. ஈரானும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் யார் வெற்றியாளர் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அமைதி பேச்சுவார்த்தை போர் நிறுத்த ஒப்பந்தம் என எதுவுமே தொடங்கவில்லை. இந்நிலையில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய அனைவருமேநினைத்தால் தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
ஆனால் ஈரான் போரில் மறைமுக வெற்றியாளராக உருவெடுத்திருக்கிறது ரஷ்யா. உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இருக்கிறது இது ரஷ்யாவுக்கு பெரிய அளவில் லாபம் தரக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவிடம் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கினால் உங்களுக்கு கூடுதல் வரி என அறிவித்த அமெரிக்காவே தற்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள் என சலுகை தரும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகிற்கு தேவையான பெரிய அளவிலான கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இருக்கிறது. இது ரஷ்யாவுக்கு தொழில் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின்படி ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நாளில் இருந்து ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையை அதிகரித்து இருக்கிறதாம். ஒவ்வொரு நாளும் ரஷ்யாவிற்கு எண்ணெய் விற்பனையின் மூலம் மட்டும் கூடுதலாக 150 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கிறதாம்.
அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக பல்வேறு நாடுகளும் இதற்கு முன் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அவை எல்லாமே தற்போது ரஷ்யாவை நோக்கி படை எடுத்துள்ளன. இதற்கு முன்பு இந்தியாவுக்கு சர்வதேச விலையில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ரஷ்யா , அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டதால் சந்தை விலைக்கு தான் தருவோம் என உறுதியாக தெரிவித்து விட்டது.
அந்த வகையில் ஈரான் போர் ரஷ்யாவுக்கு நல்ல வருமான வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. அமெரிக்காவும் தற்போதைக்கு எண்ணெய் சந்தை நிலைமையை கட்டுக்குள் வைக்க ரஷ்யா எண்ணெய் விநியோகத்திற்கு எந்த ஒரு தடையும் விதிக்காமல் இருக்கிறது. எனவே போர் நீடிக்கும் வரை ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனையும் களைகட்டும் லாபமும் அள்ளும்.
More From GoodReturns

ஈரான் போரால் தலைதூக்கும் புது பிரச்சனை..!! இந்திய மக்களுக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!

ஈரான் இனி தலைதூக்கவே முடியாது; ஆட்சியிலும் ராணுவத்திலும் பிளவு - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கண்ணுக்கு தெரியாத ஆபத்து.. ஒரு 10 டாலருக்கு பின்னால் இப்படியொரு பிரச்சனை இருக்கா..?!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

சவுதி, UAE, கத்தார்-க்கு வார்னிங் கொடுத்த ஈரான்.. இஸ்ரேல் செய்த வேலையால் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு..!

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்போது? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி!!

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஈரான் போர் விவகாரத்தில் 19 இந்தியர்கள் கைது!!

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்..!!



Click it and Unblock the Notifications

