நள்ளிரவு 1 மணி வரை வேலை.. 0% சம்பள உயர்வு.. தொழில்நுட்ப ஊழியரின் வைரல் பதிவு..!!

பணியிடங்களில் வெளிப்படைத்தன்மை, நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை மற்றும் நியாயமான ஊதியம் குறித்து இந்திய தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் மத்தியில் ஒரு ரெடிட் பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் புதிய ஊழியராக பணியில் சேர்ந்த ஒரு டெக் ஊழியர், 4 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டும், தனது மேலாளரால் ஏமாற்றப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.

ஏமாற்றமும் அதிருப்தியும்: @Mission-Toe5712 என்ற ரெடிட் பயனர் பதிவிட்ட தகவலின்படி, இவரது வேலை ஐரோப்பிய நேர மண்டலத்துடன் (European time zone) தொடர்புடையது. இதனால் அதிகாரப்பூர்வ வேலை நேரம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்தபோதிலும், இந்த ஊழியர் வழக்கமாக இந்திய நேரம் அதிகாலை 1 மணி வரை வேலை செய்யுமாறு கோரப்பட்டுள்ளார். அதிக வேலை நேரம் குறித்து இவர் கவலை தெரிவித்த பிறகு, அந்த நள்ளிரவு பணி மாற்றப்பட்டது.

நள்ளிரவு 1 மணி வரை வேலை.. 0% சம்பள உயர்வு.. தொழில்நுட்ப ஊழியரின் வைரல் பதிவு..!!

ஆனால், உண்மையான பிரச்சனை இவரது பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்ததாக இருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், மேலாளரின் உறுதியினால் பணியாளர் பதவி உயர்வு எதிர்பார்த்தார். ஆனால், இவருக்கு சம்பள உயர்வோ, ஆர்.எஸ்.யூ-க்களோ (RSUs - பங்குப் பரிசுகள்) வழங்கப்படவில்லை. இவரது ஆண்டு சம்பளம் ரூ.5 லட்சம் என்ற நிலையிலேயே இருந்தது.

இதே சமயம், இவருடன் ஒரே துறையில் இருந்த சக ஊழியர்கள் ரூ.18 லட்சம் சம்பளம் மற்றும் கூடுதல் சலுகைகளுடன் பதவி உயர்வு பெற்றிருந்தனர். மேலாளர் பதவி உயர்வு மற்றும் சலுகைகளை நிறுத்தியதற்குக் காரணம், "செயற்கை நுண்ணறிவின் (AI) முன்னேற்றம் காரணமாக நிறுவனத்தின் நிச்சயமற்ற நிலை" என்று கூறியதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு சில ஊழியர்களுக்கு மட்டும் 10,000 டாலர் மதிப்புள்ள ஆர்.எஸ்.யூ-க்களும் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஊழியர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த ஊழியர், தனது பதிவுக்கு "மேலாளரால் ஏமாற்றப்பட்டேன், மேலாளர்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்ற கடினமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்" என தலைப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவு, ஊழியர்களைத் தக்கவைத்தல், வெகுமதி அமைப்புகளில் உள்ள பாரபட்சம் மற்றும் வெளிப்படையான மனிதவள நடைமுறைகளின் தேவை குறித்துச் சமூக ஊடகங்களில் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இதில் ஒரு பயனர், "நாடகங்கள் இல்லாமல் வேறொரு நிறுவனத்திற்கு மாறுங்கள். தயாராகுங்கள், பணி ஆணை பெறுங்கள், பின்னர் பழிவாங்கும் உணர்வு, கோபம் அல்லது ஏமாற்றம் எதையும் காட்டாமல் அமைதியாக பதவி விலகுங்கள்" என்று கூறியுள்ளார்.

"3 ஆண்டுகளாக அவர் உங்களுக்கு எதுவும் கொடுக்காமல் சில்லறைகளை மட்டுமே கொடுத்திருந்தால், நீங்கள் வெளியேறுவதற்கு அவர் மனதளவில் தயாராகிவிட்டார் என்று அர்த்தம். அவர் பார்வையில் நீங்கள் ஒரு குறைந்த செயல்திறன் கொண்டவராக கருதப்பட்டுவிட்டீர்கள். இப்போது உங்கள் முறை" என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.

"நீங்கள் எவ்வளவு வேலை செய்தாலும் அது ஒருபோதும் போதாது. உங்கள் நேரத்தை மதியுங்கள் மற்றும் கூடுதல் நேரத்தை விஷம்போல் தவிருங்கள்... நிர்வாகத்தில் உள்ள யாராவது சொல்வதை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கும் வரை ஒரு வார்த்தையைக் கூட நம்பாதீர்கள்" என்று மற்றொரு பயனர் அறிவுறுத்தியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+