கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது மிக மோசமாக அதிகரித்துள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதும் வரையிலும் கூட ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது, மிக கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகின்றது.
தொடர்ந்து டிஜிட்டல் துறையில் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், பணியமர்த்தலும் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து ஐடி துறையில் ஒரு புறம் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அட்ரிஷன் விகிதமும் அதிகரித்து வருகின்றது.
அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கும்
இந்த அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள, ஐடி நிறுவனங்கள் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்தாலும், நாளுக்கு நாள் இந்த விகிதமானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. UnearthInsight, அறிக்கையின் படி, இந்த மோசமான அட்ரிஷன் விகிதமானது, அடுத்த நிதியாண்டின் இரண்டாம் பாதியிலும் தொடரலாம் என கூறியுள்ளது.
5ல் ஒருவர் வெளியேறலாம்
UnearthInsight, அறிக்கையின் படி, 2022ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அட்ரிஷன் விகிதம் 17 - 19% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து ஊழியர்களில் ஒருவர் வெளியேறும் வாய்ப்புகள் அதிகம். கடந்த 6 மாதங்களில் இந்த விகிதமானது 30% வரையில் இருந்தது கவனிக்கதக்க விஷயம்.
காக்னிசண்டில் மோசம்
கடந்த செப்டம்பர் காலாண்டில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது, மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது 33% அதிகரித்துள்ளதாக தெரிவிட்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது 20% ஆக உயர்ந்துள்ளது.
இதே ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் அட்ரிஷன் விகிதமானது 15.7% ஆக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் போக்கு
எனினும் இதில் சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயம், நாட்டின் முதல் ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின், அட்ரிஷன் விகிதமானது 15.7% ஆக உள்ளது. இது மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது குறைவாக தோன்றினாலும், முதல் காலாண்டில் 8.6% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக குறைவாக இருந்தாலும் அட்ரிஷன் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருவதை இதில் காண முடிகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications