ஏஐ தொழில்நுட்பம் பல துறைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு வரும் வேளையில், இந்தியாவில் பல துறைகளின் வர்த்தகத்தின் அடிப்படையை மாற்றி வருகிறது. இதனால் இத்தொழில்நுட்பத்தில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், புதிய ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏஐ பயன்பாடு மற்றும் அதை சார்ந்து உருவாகியிருக்கும் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும் வேளையில் இத்தொழில்நுட்பத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் டேட்டா சென்டர் சந்தை தான் தற்போது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக மாறியுள்ளது.

இத்துறையில் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஐடி துறையில் இருக்கும் நபர்களுக்கும் சரி, புதிதாக படித்து பணிக்கு வரும் மாணவர்களுக்கும் சரி டேட்டா சென்டர் பிரிவில் வேலைவாய்ப்புகளுக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
என்எல்பி சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் தற்போது 1.5 ஜிகாவாட் அளவிலான டேட்டா சென்டர்கள் உள்ளது, ஆனால் இது 2030க்குள் கிட்டத்தட்ட 4 மடங்கு அதாவது 6.5 ஜிகாவாட் அளவுக்கு வளர்ச்சி அடைய உள்ளது.
மேலும் டேட்டா சென்டர் சந்தை மட்டும் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையாக உயரும் எனவும் கணித்துள்ளது. மேலும் இத்துறையில் உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என பல தரப்பினர் டேட்டா சென்டர் துறையில் மட்டும் சுமார் 126 பில்லியன் டாலர் அளவுக்கான முதலீடு செய்ய உத்தரவாதம் கொடுத்துள்ளது.
ஆனால் தற்போது இத்துறைக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் இத்துறையில் நிலவும் திறன் பற்றாக்குறை தான், டேட்டா சென்டர் துறையின் வளர்ச்சிக்கு இணங்க இத்துறையில் போதுமான திறன் வாய்ந்த ஊழியர்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தும் ஐயம் உள்ளது, ஆனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்துறை, அரசு இணைந்து கொள்கை அளவில் மாற்றத்தை கொண்டு வந்தால் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.
தற்போது டேட்டா சென்டர் துறையில் ஏஐ இன்பரா இன்ஜினியரிங், கிளவுட் ஆப்ரேஷன்ஸ், பிளாட்பார்ம் இன்ஜினியரிங், டெவாப்ஸ், மெஷின் லேர்னிங் ஆப்ரேஷன்ஸ், டேட்டா சென்டர் ஆட்டோமேஷன் பிரிவில் பெரிய டிமாண்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications

