இந்த 10 விஷயம் நடந்துவிட்டால்.. இதுதான் பெஸ்ட் பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ஆம் தேதி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் , சாமானிய மக்களும் தங்களின் ஓய்வு காலத்திற்கு தேவையான சேமிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்பது முதல் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

1. பழைய வரி நடைமுறையில் பிரிவு 80c இன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதனை 2.5 லட்சம் உயர்த்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைக்கின்றனர் இந்த 2.5 லட்சத்தில் 1 லட்சம் ரூபாயை தனி பிரிவாக ஓய்வு காலத்திற்கு தேவையான முதலீடுகளான என்பிஎஸ் போன்ற திட்டங்களில் செய்யும் முதலீடுகளுக்கான விலக்கு என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்த 10 விஷயம் நடந்துவிட்டால்.. இதுதான் பெஸ்ட் பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?

2. மூத்த குடிமக்கள் சேமிப்பு ஊக்கமளிப்பு திட்டம் என்ற தனி திட்டத்தை அரசு அறிமுகம் செய்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் கூடுதலாக 1% வட்டி வழங்க வேண்டும்.

3. இளைஞர் ஓய்வுகால நன்மை என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் நீண்ட கால நோக்கில் செய்யும் முதலீடுகளுக்கு 25,000 ரூபாய் வரை வரி விலக்கு வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

4. அமெரிக்காவில் கிடைக்கும் திட்டத்தை மாதிரியாக கொண்டு ஓய்வுகால சேமிப்பு கிரெடிட் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறும் நிதி ஆலோசகர்கள், குறைந்த வருமானம் இருந்தாலும் ஓய்வு காலத்திற்கான திட்டங்களில் சேமிக்கும் நபர்களுக்கு கூடுதலாக 10,000 ரூபாய் வரி சேமிப்பு வழங்கலாம் என்கின்றனர்.

5. தேசிய சேமிப்பு திட்டத்தில் முதிர்வின் போது வரி இல்லாமல் பணத்தை திரும்ப பெறும் வரம்பை 60% முதல் 80% ஆக உயர்ந்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

6. ஓய்வுகால சேமிப்புக்காக பணவீக்கம் அடிப்படையிலான பத்திரங்களை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

7. ஓய்வுகால நிதியை நோக்கமாக சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க 1 லட்சம் ரூபாய் வரை வரி இல்லாத வட்டி கொடுப்பனவுகளை மூத்த குடிமக்கள் பெற்று கொள்ளலாம் என்ற வகையில் பிரிவு 80TTB ஐ கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8. ஒரே ஓய்வுகால கணக்கு என்பதை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற யோசனையையும் சிலர் வழங்கியுள்ளனர். அதாவது இந்த திட்டங்களில் வரி விலக்கினை 3 லட்சமாக உயர்த்தினால் பெரும்பாலானவர்கள் ஓய்வு காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

9. பெண் முதலீட்டாளர்களும் சமமாக ஓய்வுகால திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க அரசு புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

10. குறைந்த வருமானம் கொண்டவர்கள் ஓய்வு காலத்திற்காக மாதம் 5,000 முதலீடு செய்தால் அதற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்குவது என்பன போன்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+