கடந்த ஒரே வாரத்தில் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதனம் 1.56 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 1,56,317.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு 60,000 புள்ளிகளை தொட்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 1.74% அதிகரித்து அல்லது 1032.58 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த வலுவான ஏற்ற சந்தையில் இந்திய சந்தையில் உள்ள டாப் 10 நிறுவனங்களும் இந்த வாரம் ஏற்றத்தினை கண்டுள்ளன. இதில் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான், வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மூலதனமானது 58,671.55 கோடி ரூபாய் அதிகரித்து 15,74,053 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் டிசிஎஸ்
இன்ட்ராடே வணிகத்தில் அதன் சந்தை மதிப்பானது 16 லட்சம் கோடி ரூபாயினை தாண்டிய நிலையில், அதன் பிறகு முடிவில் பங்கு விலையானது சற்று குறைந்த நிலையில், சந்தை மூலதனமும் சற்று குறைந்துள்ளது.
இதனையடுத்து இரண்டாவது இடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 15,110.63 கோடி ரூபாய் அதிகரித்து, 14,32,013.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி
இதே மூன்றாவதாக தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளது. இதன் சந்தை மூலதனம் 10,142 கோடி ரூபாய் அதிகரித்து, 8,86,739.86 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், 6,068.69 கோடி ரூபாய் அதிகரித்து, 4,05,970.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
யும், இதே முன்னணி பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் (SBI) அதிக சந்தை மதிப்பினை இழந்துள்ளன.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்
இதனையடுத்து ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 4,863.65 கோடி ரூபாய் அதிகரித்து, 6,44,199.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 4,254.75 கோடி ரூபாய் அதிகரித்து, 4,01,978.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சியின் சந்தை மூலதனம்
ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம் 2,523.56 கோடி ரூபாய் அதிகரித்து, 5,13,073.85 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 1,904.22 கோடி ரூபாய் அதிகரித்து, 5,01,080.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications