இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கி சேவை மற்றும் நிதியுதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா வங்கி கணக்குகள். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) இன்று ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பயனாளிகளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அரசு பல நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டம் ஆகஸ்ட் 15, 2014 அன்று சுதந்திர தின உரையின்போது நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பின் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று பொதுத்துறை வங்கிகளில் ஜன்-தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் 28-ஆம் தேதியான இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கடந்துள்ளதாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து நரேந்திர மோடி தனது X பதிவில் "இன்று, நாம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை கொண்டாடுகிறோம். #10YearsOfJanDhan. அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜன்-தன் யோஜனா திட்டம் ஒவ்வொருவருக்கும் அடிப்படையான வங்கிக் கணக்கை வழங்குகிறது, குறிப்பாக பெண்கள் இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி சார்ந்த நன்மை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இன்றுடன் 10 ஆண்டை நிறைவு செய்யும் இந்தத் திட்டத்தின் இன்ஃபோகிராஃப்களையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
ஜன்தன் திட்டத்தின் வெற்றிகரமான 10 ஆண்டுகள்: இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில், PMJDY மொத்தம் 53.13 கோடி கணக்குகளை வழங்கியுள்ளது. இந்த 53 கோடி கணக்குகளில், 55.6 சதவீதம் அதாவது 29.56 கோடி ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்கள் மற்றும் 66.6 சதவீதம் அதாவது 35.37 கோடி ஜன்தன் கணக்குகள் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் உள்ளதாக நிதி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

PMJDY கணக்கின் கீழ் வைப்புத் தொகை ரூ.2,31,236 கோடியாக உள்ளது. இது ஆகஸ்ட் 14, 2024 நிலவரப்படி கடந்த காலங்களை விட 15 மடங்கு அதிகமாகும்.
PMJDY திட்டத்தின் கீழ் 36.06 கோடி ரூபாய் டெபிட் கார்டுகளை வழங்குதல், 89.67 லட்சம் பாயின்ட் ஆஃப் சேல் (PoS/mPoS) இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் UPI போன்ற மொபைல் கட்டண முறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018 முதல் 2019 நிதியாண்டில் 2,338 கோடியிலிருந்து 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் 16,443 கோடியாக அதிகரித்துள்ளது.
2018 முதல் 2019 நிதியாண்டில் 535 கோடியாக இருந்த UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2023-24 நிதியாண்டில் 13,113 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், பிஓஎஸ் மற்றும் இ-காமர்ஸில் ரூபே கார்டு பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கை 2017 முதல் 2018-ஆம் நிதியாண்டில் 67 கோடியிலிருந்து 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் 96.78 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த ஜன்தன் வங்கிக் கணக்குகளுடன் 36 கோடி இலவச ரூபே கார்டுகள், 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது. இதுவரையில் இந்தக் கணக்குகளில் ரூ.2.3 லட்சம் கோடி டெபாசிட்களைப் பெற்றுள்ளன. மேலும் கணக்குத் திறப்பு கட்டணம் அல்லது பராமரிப்புக் கட்டணங்கள் எதுவும் இல்லை, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.
கிராமப்புறம் மற்றும் அரை நகர்ப்புறங்களில் 67 சதவீத கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்பதும், 55 சதவீத கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளது என்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications