அமராவதி: ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கக்கூடிய ஒரு அதிரடியான திட்டத்தை வெளியிட்டு இருக்கிறார் . ஆந்திர மாநிலத்தவர்களை அறிவியல் துறையில் தங்களுடைய ஆய்வுகளை தீவிர படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றது முதலே மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பது ,அமராவதியை உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரமாக உருவாக்குவது என்பதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . அந்த வகையில் அமராவதி நகரத்தை குவாண்டம் தொழில்நுட்பதற்கான உலக மையமாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இதற்காக சந்திரபாபு நாயுடு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் இதன் படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த விஞ்ஞானிகள் குவாண்டம் அறிவியல் பிரிவில் ஆய்வு நடத்தி அதற்கு நோபல் பரிசு பெறுகிறார் எனும் பட்சத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் . குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சி அமராவதியில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு ஆந்திராவை சேர்ந்த நபர்கள் குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றால் அவர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார். அமராவதியில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மையம் அமைக்கப்படும் என்றும் இது உலக தரம் வாய்ந்த ஒரு ஆய்வு மையமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .
அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான ஒரு மாநிலமாக ஆந்திரா உருவாகும் என அவர் கூறும் அவர் குவாண்டம் தொழில்நுட்பம் தான் எதிர்காலம் என தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளிலும் இன்னும் சில ஆண்டுகளில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிக்கும் என கூறியுள்ள அவர் சுகாதாரத் துறையில் இது தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக மாறும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பத்தில் முதல் மாநிலமாக ஆந்திரா விளங்கும் என தெரிவித்திருக்கிறார் .அடுத்த இரண்டு ஆண்டுகளில் குவாண்டம் கம்ப்யூட்டிங் கருவிகள் ஆந்திராவின் அமராவதிலேயே உருவாக்கப்படும் என தெரிவித்த அவர் குவாண்டம் தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும் அரசு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .இந்த நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி , ஐஐடி திருப்பதி இயக்குனர் சத்யநாராயணா மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான செயலாளர் அபய் கரண்டிகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications