அமராவதி: ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கக்கூடிய ஒரு அதிரடியான திட்டத்தை வெளியிட்டு இருக்கிறார் . ஆந்திர மாநிலத்தவர்களை அறிவியல் துறையில் தங்களுடைய ஆய்வுகளை தீவிர படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றது முதலே மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பது ,அமராவதியை உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரமாக உருவாக்குவது என்பதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . அந்த வகையில் அமராவதி நகரத்தை குவாண்டம் தொழில்நுட்பதற்கான உலக மையமாக மாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இதற்காக சந்திரபாபு நாயுடு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் இதன் படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த விஞ்ஞானிகள் குவாண்டம் அறிவியல் பிரிவில் ஆய்வு நடத்தி அதற்கு நோபல் பரிசு பெறுகிறார் எனும் பட்சத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் . குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சி அமராவதியில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு ஆந்திராவை சேர்ந்த நபர்கள் குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றால் அவர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார். அமராவதியில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மையம் அமைக்கப்படும் என்றும் இது உலக தரம் வாய்ந்த ஒரு ஆய்வு மையமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .
அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான ஒரு மாநிலமாக ஆந்திரா உருவாகும் என அவர் கூறும் அவர் குவாண்டம் தொழில்நுட்பம் தான் எதிர்காலம் என தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளிலும் இன்னும் சில ஆண்டுகளில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிக்கும் என கூறியுள்ள அவர் சுகாதாரத் துறையில் இது தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக மாறும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பத்தில் முதல் மாநிலமாக ஆந்திரா விளங்கும் என தெரிவித்திருக்கிறார் .அடுத்த இரண்டு ஆண்டுகளில் குவாண்டம் கம்ப்யூட்டிங் கருவிகள் ஆந்திராவின் அமராவதிலேயே உருவாக்கப்படும் என தெரிவித்த அவர் குவாண்டம் தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும் அரசு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .இந்த நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி , ஐஐடி திருப்பதி இயக்குனர் சத்யநாராயணா மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான செயலாளர் அபய் கரண்டிகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications