அடேங்கப்பா.. ரூ.56,49,650-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 ரூபாய் நோட்டு.. இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

வெறும் நூறு ரூபாய் நோட்டிற்கு பொதுவாக எவ்வளவு பணம் கிடைக்கும். இது என்ன மாதிரியான கேள்வி என்று யோசிக்கிறீர்களா? ஆம், ஒரு நூறு ரூபாய் இந்திய கரன்சி நோட்டு ஒன்றுக்கு லண்டனில் 56,49,650 ரூபாய் கிடைத்துள்ளது. லண்டனில் நடந்த ஏலத்தில் இந்த அரிய கரன்சி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது. 1950 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரிசை எண் HA 078400 கொண்ட கரன்சி நோட்டு ஏலம் விடப்பட்டது.

இந்த நாணயத்திற்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி கிடைத்தது? என்ற ஆச்சரியம் அனைவருக்கும் இருக்கும். இது சாதாரண கரன்சி நோட்டு அல்ல. இந்த கரன்சி 'ஹஜ் நோட்டுகள்' என்று அழைக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஹஜ் யாத்திரைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் யாத்ரீகர்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த சிறப்பு கரன்சியை வெளியிட்டன. வழக்கமான இந்திய நாணயத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

 அடேங்கப்பா.. ரூ.56,49,650-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 ரூபாய் நோட்டு.. இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த ரூபாய் நோட்டு வரிசை எண் 'HA' உடன் வெளியிடப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட இந்திய கரன்சி நோட்டுகளின் நிறங்களுடன் ஒப்பிடும்போது இந்த ரூபாய் நோட்டு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ளும் வளைகுடா நாடுகளில் இந்த நாணயம் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் இந்த ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தப்பட்டது.

1961 ஆம் ஆண்டில், குவைத் தனது சொந்த நாணயத்தை வெளியிட்டது. மற்ற வளைகுடா நாடுகளும் இந்த காலகட்டத்தில் தங்கள் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின. பின்னர், 1970ல் இந்தியாவில் ஹஜ் கரன்சிகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இன்று இத்தகைய நோட்டுகள் நாணய சேகரிப்பாளர்களிடையே மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இது ஹஜ் நோட்டின் மதிப்பை அதிகரிக்கும் முக்கிய காரணியானது.

லண்டனில் நடந்த மற்றொரு ஏலத்தில், இரண்டு ரூபாய் 10 நோட்டுகள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டன. ஒரு நோட்டு ரூ.6.90 லட்சத்துக்கும், மற்றொன்று ரூ.5.80 லட்சத்துக்கும் ஏலம் போனது. இந்த நோட்டுகள் மே 25, 1918 அன்று முதல் உலகப் போரின் முடிவில் வெளியிடப்பட்டன.

1918 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஜெர்மன் டார்பிடோக்களால் மூழ்கடிக்கப்பட்ட 'எஸ்எஸ் ஷிராலா' கப்பலில் இருந்த இரண்டு நோட்டுக்கள் இவை. கடலுக்கு அடியில் நூற்றாண்டு கடந்தும் அவை அழிக்கப்படாமல் இருப்பதே மதிப்பு உயர்வுக்குக் காரணம். இந்த ரூபாய் நோட்டுக்கள் தொலைந்து போவதைத் தடுக்க, தண்ணீர் புகாதவாறு இறுக்கமான மூட்டைகளுக்குள் வைக்கப்பட்டன.

இதன் காரணமாக அவை கடல் நீரில் படாதவாறு இருந்தன. இது தவிர, இந்த நாணயங்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் உயர்ந்த தரமும் சேதத்தைத் தடுக்க உதவியது. இந்த 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப நாணயங்கள் அரிதானவை. இது சேகரிப்பாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களை வாங்க தூண்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+