மத்திய அரசு இந்தியாவில் 119 appளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான appகள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. இதற்கான முக்கிய காரணம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு மீறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த appகளை கூகுள் பிளே ஸ்டோரில் இந்தியாவில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆனால், இதுவரை 15 appகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள appகள் பிப்ரவரி 20 வரை கிடைக்கும். கூகுள் இன்னும் முழுமையாக தடையை செயல்படுத்தவில்லை.

பெரும்பாலானவை சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வந்த appகள். சில appகள் சிங்கப்பூர், அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டவை.இந்த appகளில் முக்கியமானவை வீடியோ மற்றும் குரல் அரட்டை (Video & Voice Chat) appகள். இந்த appகள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), 2000 இன் பிரிவு 69A அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன.
சில appகள் பயனர்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் சேகரிக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. சில appகள் இந்திய அரசை எதிர்த்து தவறான தகவல்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் சீனா இடையிலான அரசியல் பிரச்சனைகளுக்குப் பிறகு, பல சீன appகள் முன்பே தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை செய்யப்பட்ட appகள் பல நிறுவனங்களுக்கு பெரிய வணிக இழப்புகளை ஏற்படுத்தும். அதில், சில்சாட் (SilChat) - சிங்கப்பூர் என்னும் app, இது 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் உள்ள ஒரு பிரபலமான வீடியோ அரட்டை app.
இதை மங்கோஸ்டார் (MangoStar) குழு உருவாக்கியது. இந்த appஐ தடை செய்யவேண்டும் என்று கூகுள் தகவல் தெரிவித்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அடுத்து, ப்ளோம் (Blom) - சீனா, இது சாங்ஆப்பின் (ChangApp) டெவலப்பர் உருவாக்கிய app. இந்தத் தடையால் இந்திய சந்தையில் நிறுவனம் பெரும் இழப்பை சந்திக்கும். "கூகுள் எங்களுக்கு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை" என கூறியுள்ளது. மற்றும் ஹனிகேம் (HoneyGame) - ஆஸ்திரேலியா, இது ஷெல்லின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியது. இந்தியாவில் இந்த appக்கு பெரிய சந்தை உள்ளது. "இந்திய அரசின் விதிமுறைகளை பின்பற்ற தயாராக இருக்கிறோம்" என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது 15 appகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள appகள் இன்னும் பிளே ஸ்டோரில் உள்ளன."எப்போது அனைத்து appகளும் தடுக்கப்படும்?" என்பது குறித்து கூகுள் எதுவும் வெளிப்படுத்தவில்லை. இது தொழில்நுட்ப காரணமா அல்லது நடைமுறை பிரச்சனையா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.இந்த appகள் மீண்டும் கிடைக்குமா? தடை செய்யப்பட்ட சில appகள், இந்திய அரசுடன் இணைந்து பேச முயற்சி செய்கின்றன.
சில்சாட், ப்ளோம், ஹனிகேம் போன்ற நிறுவனங்கள், இந்த தடையை நீக்க அரசு ஒத்துழைப்பு தருமா? என்று எதிர்பார்க்கின்றன. "இந்த தீர்மானத்திற்கான காரணங்களை அரசிடம் கேட்க முயற்சிக்கிறோம்" எனவும், விதிமுறைகளை பின்பற்ற தயார்" எனவும் தெரிவித்துள்ளன. பயனர்கள் வேறு மாற்று appகளை தேட வேண்டியிருக்கும். சிலர் பிரபலமான appகளை இழக்க நேரிடும். மீண்டும் இந்திய சந்தையில் வர முயற்சிக்கும் appகள் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications