இந்தியாவில் அதிக சொத்துள்ள நபர்களில் (ultra-high net worth individuals) குறைந்தது 14% பேர் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பிரிவை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் படி, ஆசிய பசிபிக் பகுதியில் அதிக செல்வந்தர் கிளப்பில் இந்தியா நான்காவது இடத்திற்கு வந்துள்ளதாக, சர்வதேச சொத்து ஆலோசகரான நைட் ஃபிராங்க் சமீபத்தில் Attitudes Survey 2021 என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிக உயர்ந்த சொத்துள்ள தனி நபர்களில் சுமார் 56% பேர் தங்களது சொந்த வணிகம் மூலம் செல்வத்தினை பெறுவதும் தெரிய வந்துள்ளது. இதே 14% இந்தியர்கள் தங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் இருந்து செல்வம் சேர்ப்பதாக என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து நைட் பிராங்க் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக இயக்குனருமான ஷிஷிர் பைஜால் கூறுகையில், இந்தியாவில் UHNWI பட்டியலில், உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே, பெரும்பாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக இருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளது. ஆக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் முக்கிய நிர்வாக பதவிகளில் இந்தியர்கள் வலுவான போட்டியாளர்களாக உள்ளனர்.
இதே ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிங்கப்பூரில் அதிக சொத்து மதிப்புள்ள சம்பளம் பெறும் ஊழியர்களில் (UHNWIs ) 31% பேர் இருப்பதாகவும், பிலிப்பைன்ஸில் 18% பேரும், சீன மெயின்லேண்டில் 16%, இந்தியாவில் 14% பேரும், ஹாங்காங்கில் 13% பேரும் உள்ளனர்.
ஆக மொத்தத்தில் இந்த லிஸ்டில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 29%, ரஷ்யா 25%மும், கனடா 22%மும், சுவிட்சர்லாந்தில் 22% பேரும் அதிக சொத்து மதிப்புள்ள சம்பளம் பெறும் ஊழியர்களாக உள்ளனர்.