கிரெடிட் சூசி - யுபிஎஸ் கையகப்படுத்துவதற்கான முழுமையாக அறிவிப்பு என்பது இதுவரையில் வெளியாகவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் கிரெடிட் சூசியின் இந்திய செயல்பாடுகள் என்னவாகும்? 15,000 ஊழியர்களின் நிலை என்ன என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
கிரெடிட் சூசியின் முக்கிய பங்குதாரர் ஆன சவுதி நேஷனல் வங்கி, இனி எந்த நிதியினையும் வங்கியில் முதலீடு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது.
இதன் பிறகே கிரெடிட் சூசியில் குழப்பம் என்பது நீடித்து வருகின்றது. தொடர்ந்து நிதி பிரச்சனைக்கு மத்தியில் என்ன செய்ய போகிறது? நிதியினை திரட்ட என்ன செய்ய போகிறது என பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஊழியர்களுக்கு உதவி
இந்தியாவில் வங்கித் துறையில் 15,000 ஊழியர்களை கொண்ட வங்கியாக உள்ளது. சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் செயல்பாடுகளை கொண்ட ஒரு வங்கியாகும்.
15,000 வலிமையான இந்தியப் பணியாளர்கள் வங்கியின் நேரடி செயல்பாடுகளுக்கு உதவி செய்யும் ஊழியர்களை கொண்டுள்ளது. எனினும் இது பல அறிக்கைகளின் படி 5000 - 7000 ஆக கூறப்படுகிறது. மற்ற ஊழியர்கள் சர்வதேச அளவிலான ஊழியர்கள் அடங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருப்பு என்ன?
இவ்வங்கியின் கிளைகள் இந்தியாவில் மும்பை, புனே, குர்கான், பெங்களூர், ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 6 நகரங்களில் உள்ளது. இதன் உலகளாவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதி அதன் பெங்களூரு, ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா அலுவலகங்களில் இருந்து கையாளப்படுகிறது.
என்னென்ன சேவைகள்?
சுவிஸ் வங்கி கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், அதன் ஐடி ஊழியர்களில் 25% பேர் இந்தியாவில் தங்கியுள்ளனர். எனினும் அதன் பெரும்பகுதி இந்தியாவுக்கு வெளியே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிரெடிட் சூசி இந்திய ஒழுங்கு முறை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி உரிமம் மற்றும் சொத்து மேலாண்மை, முதலீட்டு வங்கி மற்றும் தரகு சேவையையும் கொண்டுள்ளது.
நிகரலாபம்
மார்ச் 2022 நிலவரப்படி கிரெடிட் சூசி வங்கி வசம் 2800 கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது. அதன் கடன்கள் மற்றும் அட்வான்சஸ் 947 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய் 804 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 303 கோடி ரூபாயாகவும் உள்ளது. சுவிட்சர்லாந்துக்கு வெளியே கிரெடிட் சூசி இரண்டாவது பெரிய சந்தை இந்தியாவாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications