மும்பை: இந்தியாவில் கிட்டத்தட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதிச் சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கான உரிமங்களை வழங்குவது, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது, ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அது குறித்து எச்சரித்து அதனை சரி செய்வது என்பன உள்ளிட்ட செயல்களை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.

கிட்டத்தட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறி தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளன என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
”டாட்டா கேப்பிட்டல் பைனான்ஸ் சர்வீசஸ் உள்ளிட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதிவு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளன. இதில் 9 வங்கி சாராத நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஆறு நிறுவனங்கள் வங்கிசாரா நிதி வணிகத்தில் இருந்து வெளியேறி தங்களது பதிவு சான்றிதழ்களை ஒப்படைத்துள்ளன என கூறியுள்ளது. வியான் குரோத் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் (Vian Growth Capital Pvt Ltd), டிராப் லீசிங் அண்ட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (Drap Leasing and Finance Pvt Ltd), ஜூவல் ஸ்டிரிப்ஸ் பிரைவேட் லிமிடெட் (Jewel Strips Pvt Ltd), ரிவால்விங் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் (Revolving Investments Ltd), அன்சு லீசிங் பிரைவேட் லிமிடெட் (Anshu Leasing Pvt Ltd), மற்றும் ஏவிபி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (A. V. B. Finance Pvt Ltd) ஆகிய 6 நிறுவனங்களும் நிதி வணிகத்தில் இருந்தே வெளியேறிவிட்டன.
அதே வேளையில் ஜேடிஎஸ் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (JDS Securities Pvt Ltd), ஜோதானி மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (Jodhani Management Pvt Ltd), ஏபிஆர்என் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (ABRN Finance Pvt. Ltd), டாடா கேபிட்டல் ஃபைனான்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Tata Capital Financial Services Ltd), டாடா க்ளீண்டெக் கேபிடல் லிமிடெட் (Tata Cleantech Capital Ltd), நேபெரால் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் (Naperol Investments Ltd), யுஎஸ்ஜி ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (USG Financial Services Pvt Ltd), உர்ஜா கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் ( Urja Capital Pvt Ltd), மற்றும் வந்தனா டீலர்ஸ் ( Vandana Dealers Pvt. Ltd) ஆகிய நிறுவனங்களும் உரிமங்களை ஒப்படைத்து விட்டன. இந்த ஒன்பது நிறுவனங்களும் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய உரிமங்களை ஒப்படைத்துவிட்டன.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications