டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது கூட்டம் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடக்கும் வேளையில் என்.சந்திரசேகரன் தனது சேர்மன் பதவி நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதை உறுதி செய்யும் முன்னரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது இந்திய கார்ப்ரேட் துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியாக மட்டும் அல்லாமல் டாடா குழும பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிந்து சுமார் 30000 கோடி ரூபாய் அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது.

கொடுத்து என்ன..?
இந்த நிலையில் என்.சந்திரசேகரன் டாடா குழுமத்திற்கு கொடுத்து என்ன..? வாங்கியது என்ன..? என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு 2017ல் வெறும் 8.9 கோடி ரூபாயாக இருந்த நிலையில் வெறும் 10 வருடத்தில் 3 மடங்கு உயர்ந்து 27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் வருவாய் அளவில் பார்த்தால் 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 16.24 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபம் ஒவ்வொரு வருடமும் 19.2 சதவீத CAGR அடிப்படையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்திற்கு 34,909 கோடி ரூபாயார இருந்த லாப அளவீடு 1.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வாங்கியது என்ன..?
டாடா சன்ஸ் சமீபத்தில் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் சேர்மனாக இருக்கும் என்.சந்திரசேகரன் 2026ஆம் நிதியாண்டுக்கு சுமார் 158.6 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளது. சந்திரசேகரன் பெற்றுள்ள 158.6 கோடி ரூபாய் சம்பளத்தில் பெரும் பகுதி கமிஷனாக வந்த தொகை மட்டுமே.
அவருடைய மொத்த சம்பளத்தில் சுமார் 140.7 கோடி ரூபாய் கமிஷனாக மட்டுமே பெற்றுள்ளார், மீதமுள்ள 17.9 கோடி ரூபாய் மட்டுமே அவருடைய அடிப்படை சம்பளமாக உள்ளது.
டாடா சன்ஸ் நிர்வாகம் 2022ஆம் நிதியாண்டுக்கு முன்பு அதன் சேர்மன் சம்பளத்தை வெளியிடாத காரணத்தால் கடந்த 10 வருடத்தில் சந்திரசேகரன் மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தெரியாது. 2024ஆம் நிதியாண்டில் 134.8 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றார் சந்திரசேகரன்.
இப்படி கடந்த 5 வருடத்தில் மொத்தம் 685 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார், இதன் மூலம் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 37.53 லட்சம் ரூபாய் அளவிலான சம்பளத்தை சந்திரசேகரன் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications