அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் H-1B விசா திட்டத்தின் புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் டிரம்ப் அரசின் முடிவுக்கு எதிராக 19 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. கலிஃபோர்னியா மற்றும் மாசச்சூசெட்ஸ் மாகாணங்கள் முன்னிலை வகிக்கும் இந்த வழக்கு மாசச்சூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
ஹெச்1பி விசா மீது 1 லட்சம் கட்டணம் விதித்த நாள் முதல் அதிகளவில் புலம்வது ஐடி ஊழியர்கள் தான், இக்கட்டணத்தால் அமெரிக்காவுக்கு லேலைக்கு செல்லும் வாய்ப்பு பெரிய அளவில் குறையும். சொல்லப்போனால் ஹெச்1பி விசாவை முக்கியமாக வைத்து வர்த்தகம் செய்யும் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தக திட்டத்தையே மாற்றியுள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் 19 மாகாணங்கள் டிரம்ப்-ன் 1 லட்சம் டாலர் கட்டணம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்தும், விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும் முழுமையாக பார்ப்போம். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு தோல்லி அடைந்தால் இக்கட்டண உயர்வு நீக்கப்படும்.
H-1B விசா திட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை சிறப்பு பணிகளுக்கு பணியமர்த்த அனுமதிக்கிறது. இது குறிப்பாக டெக் துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றன. இந்த திட்டம் அமெரிக்காவில் திறன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும், டெக் துறையில் வேகமாக வளர்ச்சி அடையவும் உதவுகிறது. ஆனால் டிரம்ப் நிர்வாகம் இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக கருதி கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தற்போது டிரம்ப் அரசு புதிதாக அறிவிக்கப்பட்ட 100,000 டாலர் கட்டணம் பொது துறை நிறுவனங்களான பள்ளிகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பெரிய சுமையாக அமையும் என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. H-1B விசா மூலம் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களை பணியமர்த்துகின்றன. இக்கட்டணத்தால் இது தடைபடும் அல்லது குறையும் என விவாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா கூறுகையில், இந்த கட்டணம் சட்டவிரோதம் என்றும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் இது மாநில சேவைகளை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
இது மூன்றாவது வழக்கு - முன்பு அமெரிக்காவின் சேம்பர் ஆஃப் காமர்ஸ், யூனியன்கள் போன்றவை வழக்கு தொடர்ந்தன.
இதுக்குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் இந்த கட்டணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று கூறினார். H-1B திட்டத்தை சீர்திருத்துவதற்கான முதல் படியாக இது உள்ளது என்று விளக்கினார். அமெரிக்க ஊழியர்களை முதலில் பாதுகாக்க இது உதவும் என்று டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது. ஆனால் மாகாணங்கள் இது காங்கிரஸ் அதிகாரத்தை மீறியது என்று வாதிடுகின்றன.
இந்த வழக்கு அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். H-1B விசா திட்டம் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி துறைகளுக்கு முக்கியமானது. 1 லட்சம் டாலர் கட்டணம் அமலானால் திறன் கொண்ட ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவது குறையும். இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம். வழக்கு முடிவு H-1B திட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் அட்டாக்.. டிரம்ப்-க்கு எதிராக நிற்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள்.. முதல்ல எங்களுக்கு பதில சொல்லுங்க..!!

ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மரணம்..? இஸ்ரேல், டிரம்ப் பகிரங்க அறிவிப்பு..!

கச்சா எண்ணெய்-க்கு வேட்டு.. Strait of Hormuz மொத்தமாக முடக்கம்.. பெட்ரோல், டீசல் விலை உயரப்போகுது..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?



Click it and Unblock the Notifications