மும்பை: ஹூரன் ஒவ்வொரு வருடமும் இந்தியத் தொழில்துறை தொடர்பாகவும், பணக்காரர்கள் தொடர்பாகவும் அவ்வப்போது சந்தையின் கள நிலவரத்தை ஆய்வு செய்து புது புது பட்டியலை வெளியிடும். அந்த வகையில், இந்த முறை ஹூரன் பார்க்ளேஸ் உடன் இணைந்து இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் 2024 ஆம் ஆண்டு பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்த வகையில் இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் 2024 பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடம் பெற்றுள்ளது. இந்த குடும்பத்தின் மதிப்பு ரூ.25.75 லட்சம் கோடியாகும். ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் அம்பானி குடும்பத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

அம்பானி குடும்பத்தைத் தொடர்ந்து நீரஜ் பஜாஜ் தலைமையிலான பஜாஜ் குடும்பம் (ரூ. 7.13 லட்சம் கோடி) இரண்டாவது இடத்திலும், பிர்லா குடும்பம் (ரூ. 5.39 லட்சம் கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, அதானி குடும்பம் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.
இந்த பட்டியலில் உள்ள முதல் பத்து குடும்பங்களின் மொத்த மதிப்பு ரூ. 6,009,100 கோடியாகும், இது இந்தியாவில் குடும்பம் நடத்தும் நிறுவனங்களின் வலிமையை ஹூரன் பார்க்ளேஸ் காட்டுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
இதைத் தொடர்ந்து JSW ஸ்டீல் மற்றும் சுரங்கத் தொழில்களை நடத்தும் ஜின்டால் குடும்பத்தின் மதிப்பை ரூ. 471,200 கோடி உடன் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஷிவ் நாடார் குடும்பத்தின் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், சாப்ட்வேர் மற்றும் ஐடி சேவைத் துறையில் முக்கியமான நிறுவனமாகவும் ரூ. 430,600 கோடி மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, மகேந்திரா அண்ட் மகேந்திரா மூலம் ஆட்டொமொபைல் துறையில் அசத்தி வரும் மகேந்திரா குடும்பம் ரூ. 345,200 கோடி மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளது. 7வது இடத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் தானி குடும்பமும், 8வது இடத்தில் விப்ரோ-வின் ப்ரேம்ஜி குடும்பமும், 9வது இடத்தில் DLF-ன் ராஜீவ் சிங் குடும்பமும், 10வது இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குடும்பமும் உள்ளது.
இந்த பட்டியலில் மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் 2024 மார்ச் 20 நிலவரப்படி கணக்கிட்டுச் சேர்க்கப்பட்டு உள்ளது. மதிப்பீட்டு முறையில் தனியார் முதலீடுகள் மற்றும் லிக்விட் சொத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதில் டாடா குழுமம் சேர்க்கப்படவில்லை என்பது பலரின் கேள்வியாக இருக்கலாம், டாடா குழுமம் டாடா சன்ஸ் என்னும் தொழிற்துறை வல்லுனர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. டாடா சன்ஸ் இல்லாமல் டாடா டிரஸ்ட் நிர்வாகம் செய்திருந்தால் டாடா குழுமம் ஒரு குடும்ப வர்த்தகமாக இருந்திருக்கும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications