நாட்டில் பல முன்னணி ஐடி நிறுவனங்களும் தற்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சனை அட்ரிஷன் விகிதம் தான்.
அதிலும் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையினரின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இந்த அட்ரிஷன் விகிதமானது அதிகரித்துள்ளது மிக கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் விப்ரோ நிறுவனத்தில் கடந்த 90 நாட்களில் 20% ஊழியர்கள் தங்களது வேலையினை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஃபோசிஸ் அட்ரிஷன் விகிதம்
இது குறித்து வெளியான செய்தியில் விப்ரோ மட்டும் அல்ல, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக விப்ரோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டில் 20.5% அட்ரிஷன் விகிதம் அதிகரித்து காணப்படுகின்றது.
Array
மற்ற ஐடி ஜாம்பவான்கள் ஆன டிசிஎஸ் நிறுவனத்தின் 11.9% அட்ரிஷன் விகிதம் அதிகரித்தும், இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20.1% அதிகரித்தும், ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தில் 15.7% ஆகவும், இதே காக்னிசண்ட் நிறுவனத்தில் 33% ஆகவும் அதிகரித்துள்ளது.
திறமைக்கான தேவை
விப்ரோவின் தலைவர் மற்றும் சி.ஹெச்.ஆர்.ஓ செளரப் கோவில் கூறுகையில், அட்ரிஷன் விகிதம் என்பது தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் இருந்தாலும், திறமைக்கான தேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது.
டிஜிட்டல் துறைக்கான தேவையானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல ஒப்பந்தங்களை ஐடி நிறுவனங்கள போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணியமர்த்தலை அதிகரிக்கலாம்
அதெல்லாம் சரி இந்த அட்ரிஷன் விகிதத்தினை எப்படி சமாளிப்பது?
இதற்காக நிறுவனங்கள் முதலில் கையில் எடுப்பது பணியமர்த்தலை அதிகரிப்பது தான். தற்போது நிறுவனங்கள் இதில் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கிடையில் விப்ரோ நிறுவனம் 2022 - 23ம் நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
Array
திறமையை மேம்படுத்துதல், நிறுவனத்திற்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி அளிப்பது. இது அசாதாரண நேரங்களில் ஊழியர்களை அதற்கேற்ப செயல்பட வழிவகுக்கும்.
மேலும் செயல்திறன் சார்ந்த கலாச்சாரத்துடன் சீரமைக்க இந்த ஆண்டு, பல சீர்திருத்தங்களை நிர்வாகம் செய்து வருகின்றது.
தக்க வைப்பு முயற்சிகள்
ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல வகையான போனஸ் திட்டங்கள், குறிப்பாக திட்டம் மாற்றம், போனஸ் சுழற்சி, அனைத்து ஊழியர்களுக்குமான MSI சுழற்சி, பதவி உயர்வு உள்ளிட்ட பல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஆக இது போன்ற பலவற்றின் மூலம் நிறுவனம் சவால்களை சம நிலைப்படுத்தி வருகின்றது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications