இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டான 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்ததற்கான தேவை முடிவடைந்த நிலையில் கிளீன் நோட் பாலிசி கீழ் மொத்தமாக திரும்ப பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கை பணமதிப்பிழப்பு போல் அல்லாமல் செப்டம்பர் 30 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அதுவரையில் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் அனைத்து இடத்திலும் 2000 ரூபாய் பயன்படுத்தப்படும். இந்த ஒரு வித்தியாசம் இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்ட நடவடிக்கை மூலம் டெபாசிட், கடன், நுகர்வு ஆகியவற்றில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ தனது அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றதில் இந்தியாவில் நுகர்வு அதாவது consumption பிரிவில் சுமார் 55000 கோடி ரூபாய் அளவிலான தொகை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக அறிவித்த பின்பு தங்கம், நகை, ஏசி, மொபைல் போன், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் அதிகப்படியான தொகையை செலவு செய்துள்ளனர்.
இதேபோல் இந்தியா முழுவதும் இருக்கும் பெட்ரோல் பங்க்-களில் மக்கள் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுகளை செலவு செய்கின்றனர் என்பதை All-India Petroleum Dealers Association (AIPDA) அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக பெட்ரோல் பங்க்-களில் 40 சதவீத டிஜிட்டல் பேமெண்ட்களாக பெறுவார்கள், 2000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்பு 10 சதவீதமாக குறைந்துள்ளது.
இதேபோல் ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளில் பெரும்பாலான கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டு உள்ளது, இதேபோல் கேஷ் ஆன் டெலிவரிகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சோமேட்டோவில் சுமார் 75 சதவீத கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதாக தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பொருட்கள் முதல் டைனர் மரச்சாமான்கள் வரையில் பலவற்றின் விற்பனையில் ஏற்றம் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கோயில்கள் மற்றும் பிற மத அமைப்புகளுக்கு 2,000 நோட்டுகள் மூலம் நன்கொடைகள் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 2000 ரூபாய் நோட்டு மூலம் பெறப்பட்ட 92000 கோடி ரூபாய் அளவிலான வங்கி டெபாசிட் தொகையில், சுமார் 55000 கோடி ரூபாயை மக்கள் திரும்பபெற்றுள்ளனர். இது கட்டாயம் நுகர்வோர் சந்தைக்கு தான் சென்றிருக்கும் என எஸ்பிஐ தனது அறிக்கையில் உறுதியாக தெரிவிக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications