ரூ. 95,000 கோடியை 'ரீ-பண்ட்' செய்த வருமான வரித்துறை!

ரூ. 95,000 கோடியை 'ரீ-பண்ட்' செய்த வருமான வரித்துறை!
டெல்லி: பிடித்தம் செய்யப்பட வேண்டியதை விட அதிகமான வருமான வரி பிடிக்கப்பட்டிருந்தால் 4 வருடமானாலும் அதைக் கட்டியவருக்குத் திருப்பித் தர வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இப்போதைய நடைமுறையின்படி நாம் செலுத்த வேண்டியதை விட அதிக வருமான வரி கட்டியிருந்தால் அது தொடர்பான ஆவணங்களை 4 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்து ரீ-பண்ட் பெற வேண்டும். நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்டால் பணத்தைத் திருப்பிப் பெற முடியாது.

இந்த விதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீக்கியுள்ளது.

2011-12ம் ஆண்டில் மட்டும் வருமான வரித்துறை ரூ. 95,000 கோடியை வரி செலுத்தியோருக்கு ரீ-பண்டாகக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்த நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரூ. 16,900 கோடி ரீ-பண்ட் செய்யப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+