டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாதான் எடுத்தார் என்று அத்துறையின் முன்னாள் செயலாளர் பெகுரா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரத்தை விசாரித்துவரும் பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜரான பெகுரா கூறியதாவது:
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது நான் அதே துறையின் செயலராக இருந்தேன். அதனால், அமைச்சகம், துறை ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. 2007-ம் ஆண்டு அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யும் முன்பு எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்த அடிப்படையில் ஒதுக்கீடு மேற்கொள்ளலாம் என ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது. அலைக்கற்றை ஒதுக்கீட்டை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்குவதற்கு முன் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.
அந்தத் தருணத்தில் 575 விண்ணப்பங்கள் அலைக்கற்றை உரிமம் கோரி வந்தன. அதிலிருந்து தகுதிவாய்ந்த நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான கடைசி நாள் 2007 அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு செப்டம்பர் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் 232-ஆக விண்ணப்பங்கள் சுருக்கப்பட்டன.
இந்த விஷயத்தில், மொத்தம் வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்குவதற்கு முடிவு செய்யலாம் என துறைச் செயலர் என்ற அளவில் நான் கருதினேன். ஆனால், அமைச்சராக இருந்த ராசா, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் அடிப்படையில் விண்ணப்பங்களைத் தேர்வு செய்யலாம் என்று கருதினார்.
இந்த விஷயத்தில்தான் எனக்கும் ராசாவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. ஆனாலும், அமைச்சர் என்ற முறையில் முடிவு எடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது. அது சரி என்றும் எனக்கு தோன்றியது என்றார் பெகுரா.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications