
இந்த மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை சரிவர பெய்யவில்லை. கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் வழக்கத்தைவிட 1 சதவீதம் அதிகமாக மழை பெய்தாலும், இந்த 7 மாநிலங்களில் 60 முதல் 70 சதவீதம் அளவுக்கு மழை குறைவாகவே பெய்துள்ளது.
குஜராத்தில் 71 சதவீதமும் ராஜஸ்தானில் 82 சதவீதம் அளவுக்கும் மழை அளவு குறைந்துள்ளது.
நாட்டின் மொத்தமுள்ள 1097 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் 175 லட்சம் ஹெக்டேர் நிலும் இந்த மாநிலங்களில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த மாநிலங்களள் பயிரிடும் பரப்பளவைக் குறைத்துக் கொண்டு, குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சலைத் தரும் பயிர்களை மட்டுமே பயிரிடுமாறு மத்திய விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சல் தரும் சுமார் 60 லட்சம் குவிண்டால் அரிசி, பருப்பு, சோயா, சூரியகாந்தி விதை ரகங்களை இந்த மாநிலங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மேலும் மழை குறைந்ததால் நாட்டில் உள்ள அணைக்கட்டுக்களில் 18 சதவீதம் அளவுக்கே நீர் இருப்பு உள்ளது. இதனால் பல பகுதிகளில் குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.
'எல் நினோ' காரணம்:
இந் நிலையில் மழை குறைந்து போனதற்கு 'எல் நினோ' பருவ நிலை மாற்றமே காரணம் என்று
இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
'எல் நினோ' காரணமாக இந்த மாதத்திலும், பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
இன்னும் வறட்சி நிலை ஏற்படவில்லை-சரத் பவார்:
இந் நிலையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில், இந்தாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. ஆனாலும், இன்னும் நாட்டில் வறட்சியான சூழல் ஏற்படவில்லை.
போதிய அளவு மழை பெய்யாததால், உணவு உற்பத்தி குறையும் என, கூறப்படுகிறது. விவசாயிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால், அங்கு மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆலோசித்து வருகிறோம்.
அதேபோல், நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த முடிவை எடுப்பதற்காக, வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை காத்திருப்போம். அதற்கு பின், இதுபற்றி முடிவு எடுக்கலாம்.
பருவமழை சரியாகப் பெய்யாததால், உணவு உற்பத்தி செய்வதில், விவசாயிகளுக்கு சவாலான சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதும், சவாலான பிரச்னை.
அதே நேரத்தில் இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில், 2011-12ல், சாதனை அளவாக, 252 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளோம் என்றார்.
கவலையில் அரசியல்வாதிகள்:
இந் நிலையில் வறட்சியை எதிர்கொண்டுள்ள தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளும் கட்சிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. குஜராத் மாநிலம் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலையும், எல்லா மாநிலங்களும் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்கவுள்ளன.
வறட்சி ஏற்படும்போதெல்லாம் அடுத்து நடந்த எந்தத் தேர்தல்களிலும் ஆளும் கட்சிகள் படுதோல்வியை சந்திப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications