2007-ம் ஆண்டு இந்த நிறுவனப் பங்கு விலை ரூ 335 ஆக இருந்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் நிதி நிலையிலும் வர்த்தகத்திலும் தொடர்ச்சியாக ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பங்குகள் விலை படிப்படியாக வீழ்ச்சி கண்டது.
இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறைகூட லாபக் கணக்கு காட்டவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலகோடி ரூபாய் வரிபாக்கி காரணமாக இந்த நிறுவனத்தின் கணக்குகளை கடந்த மே மாதம் முடக்கி வைத்தது வருமான வரித்துறை. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாத நிலை.
மேலும் கிங்பிஷர் செக்குகள் பணமின்றி திரும்பியதால், ஜிவிகே நிறுவனம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது கிங்பிஷருக்கு எதிராக.
மேலும் ரூ 1000 கோடி பாக்கியை திரும்ப செலுத்தாதற்காக, கடன் கொடுத்தவர்கள் 32 விமானங்களை திரும்ப எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அதன் முக மதிப்பான ரூ 10-லிருந்து ரூ 9.43 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். இதனால் கிங்ஃபிஷர் பங்குகளின் வர்த்தகம் தொடருமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.