மாருதி வன்முறை எதிரொலி... பங்குகள் விலை 5% சரிந்தது
மும்பை: மாருதி சுஸுகி நிறுவன ஊழியர்களின் வன்முறை தாக்குதல் சம்பவம் எதிரொலியாக அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீத சரிவைச் சந்தித்தன.
ஹரியானா மாநிலம் மனீசரில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தில் ஊழியர்கள் நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தால் அந்த உற்பத்திப் பிரிவு காலவரையின்றி மூடப்பட்டு விட்டது. இது மாருதி நிறுவன பங்குகள் மீது எதிரொலித்துள்ளது.
இன்று காலை மும்பை பங்குச் சந்தையில், 5.42 சதவீத அளவுக்கு பங்குகளின் மதிப்பு குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1082.50 ஆக இருந்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும், 5.69 சதவீத சரிவைச் சந்தித்தன மாருதி சுஸுகி நிறுவன பங்குகள்.
Share This Article
English summary
Maruti Suzuki shares plunge over 5 pc | மாருதி வன்முறை எதிரொலி... பங்குகள் விலை 5% சரிந்தது
Declining for the third day in a row, shares of Maruti Suzuki today plunged more than 5 per cent as the company has declared an indefinite lockout at its Manesar plant in Haryana. After opening weak, shares of the company tanked 5.42 per cent to Rs 1,082.50 on the BSE. At the NSE, the stock plummeted 5.69 per cent to Rs 1,082.20.
Story first published: Monday, July 23, 2012, 15:30 [IST]