புதுச்சேரி: மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காததைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் இன்று 24 மண் நேர கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் வர்த்தக சபைகள், 40 வணிக சங்கங்கள், மேட்டுப்பாளையம் சேம்பர் ஆப் இண்டஸ்ட்ரீஸ், தட்டாஞ்சாவடி சிறு தொழிற்சங்கம் சார்பில் இந்த கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
இதனால் புதுவை யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. வியாபாரிகளின் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனத கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
மதுபான வரி நீங்கலாக இதர இனங்களில் உயர்த்தப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் வேண்டுகோள்.