நிறுவனத்தின் மொத்த வருவாய் 24.37% அதிகரித்து ரூ. 10,619.6 கோடியாகியுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 8,538.4 கோடியாக இருந்தது.
கடந்த 3 மாதங்களில் இந்த நிறுவனம் புதிதாக 37 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு சரிந்ததால் டாலர் வருவாய் 1.36% சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த காலாண்டிலும் பெரிய அளவில் வருவாயும் லாபமும் உயர வாய்ப்பில்லை என்றும் விப்ரோ அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து இன்று பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகளின் விலை சரிந்தது.
இந் நிலையில் விப்ரோ தனது இந்திய ஊழியர்களின் ஊதியத்தை 8 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.