இது தொடர்பாக இன்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
யூனிநார் நிறுவனமானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் தமது சேவையை படிப்படையாகக் குறைக்க உள்ளது. அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் கிழக்கு, உத்தரப்பிரதேசம் மேற்கு, பீகார், ஜார்க்கண்ட், கொல்கத்தா, மேற்குவங்கம், ஆந்திரப் பிரதேசம், மும்பை, மஹாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் சர்க்கிளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சேவை குறைக்கபப்டும் மாநிலங்களில் புதியதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. சேவை குறைப்பு நடவடிக்கை குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலால் 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததாலும் ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக தெளிவான வரையறைகள் இல்லாததாலும் இத்தகைய ஒரு முடிவை யூனிநார் எடுத்திருக்கிறது.
மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கலந்து கொள்ள ஏதுவாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் யூனிநார் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது சேவை நிறுத்த முடிவு செய்துள்ள 4 மாநிலங்களிலும் ம் சுமார் 400 பணியாளர்களை நேரடியாக யூனிநார் நியமித்திருக்கிறது. இவர்களில் பலரை வீட்டுக்கு அனுப்பவும் சிலரை பணியிட மாற்றம் செய்யவும் இந்நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.