ஆடிப்பெருக்கு: ஆகஸ்ட் 2ல் போஸ்ட் ஆபீஸில் தள்ளுபடி விலையில் தங்க காசுகள்

தபால் துறை ரிலயன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2008ம் ஆண்டு முதல் தபால் நிலையங்களில் தங்க நாணயங்களை விற்பனை செய்து வருகின்றது. 24 கேரட் தங்க நாணயங்கள் அரை கிராம், 1, 5, 8, 10 மற்றும் 50 கிராம் எடை கொண்டவையாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு வால்காமி (சுவிட்சர்லாந்து) சான்றிதழ்டன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த தங்க நாணயங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இத்திட்டம் தற்போது தமிழகத்தில் உள்ள 283 தபால் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் 2ம் தேதி அன்று மட்டும் 6.5 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications